அரசின் கோழைத்தனம்.. லடாக்கில் இந்தியா பெரிய விலைகொடுக்க போகிறது.. ராகுல் காந்தி கருத்து!

மத்திய அரசின் கோழைத்தனத்தால் லடாக் பிரச்சனையில் இந்தியா பெரிய விலை கொடுக்க போகிறது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி டிவிட் செய்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின் கோழைத்தனத்தால் லடாக் பிரச்சனையில் இந்தியா பெரிய விலை கொடுக்க போகிறது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி டிவிட் செய்துள்ளார்.

இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் நடந்த பிரச்சனையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. லடாக் எல்லையில் இருந்து 2 கிமீ தூரத்திற்கு சீனா படைகளை வாபஸ் பெற்றுள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இடையே நடந்து பேச்சுவார்த்தைதான் இதற்கு காரணம்.

China standoff with India: We are going to pay a huge price because of GOI’s cowardly actions says Rahul

இதையடுத்து நேற்று வெளியுறவுத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் எல்லைக்கு சென்று அங்கு வீரர்கள் உடன் சந்திப்பு நடத்தினார். லடாக் சென்ற அவர் அளித்த பேட்டியில், இந்த சண்டையை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும். சீனா எந்த நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை. எல்லையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ஆனால் மொத்தமாக நிலைமை அப்படியே மாறிவிடும் என்று என்னால் உறுதி அளிக்க முடியாது. எல்லை பிரச்சனை குறித்து உத்திரவாதமாக எதுவும் தெரிவிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

China standoff with India: We are going to pay a huge price because of GOI’s cowardly actions says Rahul

இந்த நிலையில் ராஜ்நாத் சிங்கின் இந்த பேச்சை பகிர்ந்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அதை விமர்சனம் செய்துள்ளார். அவர் தனது டிவிட்டில், சீனா நம்முடைய நிலத்தை எடுத்துக்கொண்டு விட்டு ஆணவத்துடன் செயல்படுகிறது. இது சீனாவை மேலும் வலிமையாக்கும்.

மத்திய அரசின் கோழைத்தனத்தால் லடாக் பிரச்சனையில் இந்தியா பெரிய விலை கொடுக்க போகிறது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி டிவிட் செய்துள்ளார்.ராகுல் காந்தி தனது டிவிட்டில் மத்திய அரசு செம்பர்லைன் (Chamberlain) போல செயல்படுகிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார். யுகேவின் பிரதமராக 1937ல் இருந்த நேவைல் செம்பர்லைன் ( Neville Chamberlain)ஐ சுட்டிக்காட்டி ராகுல் காந்தி இப்படி குறிப்பிட்டுள்ளார். யுகேவின் நிலத்தை செம்பர்லைன், ஹிட்லருக்கு தாரை வார்த்தது போல மத்திய அரசும் சீனாவிடம் நிலத்தை வழங்கி உள்ளது என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.

இந்த செம்பர்லைன் வார்த்தை தற்போது டிவிட்டரில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+