ஆயுதங்கள் சப்ளை-ராணுவ வீரர்கள் மீது தாக்குதல்- வடகிழக்கில் பிரிவினைவாதத்தை உயிர்ப்பிக்கிறது சீனா?
டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினைவாதத்தை உயிர்ப்பிக்கும் வகையில் பயங்கரவாதிகளை சீனா தூண்டிவிட்டு வருவதாக பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஜம்மு காஷ்மீரின் லடாக் எல்லையில் சீனா தனது ஆக்கிரமிப்பு முயற்சிகளை விட்டுவிடவில்லை. சீனாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும் அப்பகுதியில் ராணுவ குவிப்பை சீனா கைவிடவில்லை.
இமாச்சலப் பிரதேசத்தில் 25 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலைகளை அமைத்து வருகிறது சீனா. லடாக்கை தொடர்ந்து இமாச்சல் எல்லையில் சேட்டையை சீனா எந்த நேரத்திலும் காட்டலாம் என்பது நிலைமை.,

சீனாவுக்கு நோஸ்கர்
வடகிழக்கு மாநிலங்களில் அருணாசலப் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் சீனா வாலாட்டி வந்தது. இதற்கு இந்திய தரப்பு பதிலடி கொடுத்து வருகிறது. ஆனாலும் சிக்கிமிலும் அருணாசலப் பிரதேசத்திலும் சீனா மூக்கை நுழைத்து உடைபட்டு போவது தொடர் கதையாக இருக்கிறது.

மியான்மர் எல்லையில் ஆயுத குவியல்
இதனைத் தொடர்ந்து ஒட்டுமொத்த வடகிழக்கிலும் அசாதாரணமான சூழ்நிலையை உருவாக்கும் குள்ளநரி வேலைகளில் சீனா குதித்திருக்கிறது என்கின்றன பாதுகாப்பு துறை வட்டாரங்கள். அண்மையில் மியான்மர்- தாய்லாந்து எல்லையில் மிகப் பெரிய அளவு சட்டவிரோத ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆயுதங்கள் அனைத்தும் சீனா தயாரிப்புகள் ஆகும்.

வடகிழக்கு தீவிரவாதிகளுக்கு சப்ளை
இது தொடர்பாக European Foundation for South Asian Studies என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆயுதங்கள் வடகிழக்கு மாநிலங்களில் தனிநாடு கோருகிற பிரிவினைவாதிகளுக்கு அனுப்பி வைக்க கொண்டுவரப்பட்டவை. மியான்மர் எல்லையில்தான் இந்த வடகிழக்கு மாநில தீவிரவாதிகளின் முகாம்கள் இருக்கின்றன. இவர்களுக்கே இந்த ஆயுதங்கள் கடத்தப்பட்டன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உயிரூட்டும் சீனா
வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதம் ஏந்திய குழுக்கள் இப்போது விரல்விட்டும் எண்ணும் வகையில்தான் இருக்கின்றன. அவையும் கூட தங்களது இருப்புக்காக அவ்வப்போது சிறுசிறு தாக்குதல்களை நடத்தக் கூடியவை. இந்த செத்துப் போன பிரிவினைவாத அமைப்புகளை உயிர்ப்பிக்கும் வேலையைத்தான் சீனா தொடங்கி வைத்திருக்கிறது.

திடீர் தாக்குதல்கள்
அண்மையில் மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். சீனாவிடம் ஆயுத பயிற்சி பெற்ற வடகிழக்கு பயங்கரவாதிகள் குழுவே இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. வடகிழக்கில் ஆயுதங்கள் சப்ளை, பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்கள் என சீனா பிரிவினைவாதத்தை உயிர்ப்பிப்பதையும் தேசம் தீரமுடன் எதிர்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications