இலங்கையில் சீனா உளவு கப்பல்... இந்திய பாதுகாப்புக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல்: ராஜ்யசபாவில் வைகோ
டெல்லி: இலங்கையில் சீனா உளவு கப்பல் அனுமதிக்கப்படுவதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ராஜ்யசபாவில் எச்சரித்துள்ளார்.
Recommended Video
சீனாவின் உளவு கப்பலானது ஆராய்ச்சி என்ற பெயரில் வரும் ஆக.11-ந் தேதி இலங்கைக்கு வருகை தர உள்ளது. இலங்கையின் அம்பாந்தோட்டா துறைமுகத்த்ல் ஒரு வார காலம் இந்த உளவு கப்பல் நிலைநிறுத்தப்பட உள்ளது.

இலங்கைக்கு சீனா உளவு கப்பல் வருகை தருகிறது என ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை அந்நாட்டு அரசு முதலில் மறுத்தது. இதனால் சர்வதேச அளவில் மிகப் பெரும் சர்ச்சை வெடித்தது. இதனையடுத்து இலங்கை அரசானது, சீனாவின் ஆராய்ச்சி கப்பல்தான் இலங்கைக்கு வருகிறது; அனுமதி அளித்துள்ளோம் என கூறியது.
இலங்கைக்குள் சீனாவின் கப்பலை அனுமதிக்கக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருந்து வருகிறது. தொடக்கம் முதலே இலங்கை அரசின் நிலைபாட்டுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இலங்கைக்குள் சீனா கப்பலை அனுமதிக்க கூடாது என ஈழத் தமிழ் தலைவர்கள், மலையக அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்தியாவின் அதிருப்தியை எதிர்கொள்ள நேரிடும் என்பதும் அவர்களது எச்சரிக்கை.
தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கையும் விடுத்திருந்தனர். இந்த நிலையில் இன்று ராஜ்யசபாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்த விவகாரத்தை எழுப்பினார். ராஜ்யசபாவில் பேசிய வைகோ, இலங்கையின் அம்பந்தோட்டா துறைமுகத்தில் சீனாவின் உளவு கப்பலுக்கு அந்நாட்டு அரசு அனுமதி கொடுத்துள்ளது. சீனாவின் உளவு கப்பல் இந்தியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளை எளிதாக உளவு பார்க்க இது வகை செய்யும் என சுட்டிக்காட்டினார்.
முன்னதாக ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டிருந்தனர். பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து இந்த அமளி நீடித்ததால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
-
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications