உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா பெயர் பரிந்துரை- போப்டே கடிதம்!
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி என்.வி. ரமணா பெயரை தற்போதைய தலைமை நீதிபதி போப்டே பரிந்துரைத்துள்ளார்.
தற்போதைய தலைமை நீதிபதி போப்டேவின் பதவி காலம் ஏப்ரல் 23-ல் முடிவடைகிறது இதனையடுத்து அடுத்த தலைமை நீதிபதியை நியமிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தலைமை நீதிபதி போப்டேவுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இதனைத் தொடர்ந்து தமக்கு அடுத்த நிலையில் இருக்கக் கூடிய மூத்த நீதிபதியான என்.வி. ரமணா பெயரை பரிந்துரைத்துள்ளார் போப்டே.
சர்ச்சை
நீதிபதி என்.வி. ரமணாவை தலைமை நீதிபதியாக நியமிக்கக் கூடாது என ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தலைமை நீதிபதி போப்டேவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். ஆனால் அந்த கடிதத்தை போப்டே நிராகரித்திருக்கிறார்.
ஆந்திராவை சேர்ந்த என்.வி.. ரமணா, 1957-ம் ஆண்டு பிறந்தவர். ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் நீண்டகாலம் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். இவரது பதவி காலம் 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ல் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications