இந்தியாவில் 25% அளவுக்கு குறைவான எடையுடன் வளரும் குழந்தைகள்.. காலநிலை மாற்றத்தால் பாதிப்பு!
டெல்லி: காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் குழந்தைகளின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சார்ந்த குழந்தைகள், பாதிக்கப்படாத மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகளை விட 25 சதவீதம் எடை குறைவாக வளர்கின்றனர் என்று ஆய்வுகள் வெளியாகி உள்ளன.
டெல்லியை சேர்ந்த institution of economic growth எனும் நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், பிரசவம் மருத்துவமனைகளிலோ அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்திலோ இல்லாமல் வீட்டில் அல்லது வேறு இடத்தில் நடப்பதற்கான வாய்ப்புகள் 38 சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

இந்த மாவட்டங்களில் பிறக்கும் குழந்தைகள் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் வளர்கின்றனர். அதேபோல மந்தமான வளர்ச்சியும் குழந்தைகளிடையே பதிவாகி இருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.
இந்தியாவில் சுமார் 80 சதவீத மக்கள் புயல், வெள்ளம், வெப்ப அலைகள் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழ்கின்றனர். எனவே இந்தியா சர்வதேச அளவில் வளர்ச்சி அடைய, இந்த காலநிலை பாதிப்புகள் பெரிய தடையாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். வானிலை பாதிப்புகளால் இடர்களை எதிர்கொள்ளக்கூடிய மக்கள் வேறு இடத்திற்கு புலம்பெயர்ந்து செல்வது இந்தியாவில் குறைவாக இருப்பதால், காலநிலை மாற்றத்தின் விளைவுகள் இந்தியாவில் மோசமாக எதிரொலிக்கலாம் என்றும் அச்சம் எழுந்திருக்கிறது.
எனவே காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில், அரசு சிறப்பு கவனம் செலுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவ வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
அதேபோல காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை, எப்படி கட்டுப்படுத்துவது என்றும், புதை படிம எரிபொருட்களை முடிந்த அளவு எவ்வாறு தவிர்ப்பது என்றும் மத்திய அரசு விஞ்ஞான ரீதியாக ஆலோசனை மேற்கொண்டு அதை அமல்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். சமீபத்தில் காலநிலை மாற்றத்தால் பிரிட்டன் மற்றும் பாகிஸ்தான் கடுமையான பாதிப்புகளை எதிர் கொண்டது.
இந்தியாவிலும் பருவமழை சில நேரங்களில் தீவிரமாகவும், சில நேரங்களில் முற்றிலும் பெய்யாமலும் போய்விடுகிறது. இதற்கும் காலநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
-
வளைகுடா இந்தியர்களுக்கு மேஜர் அறிவிப்பு.. கத்தாரிலிருந்து சவுதி அரேபியா வழியாக நாடு திரும்ப ஏற்பாடு -
ஈரான் போர் உச்சத்துல இருக்கு.. ஆனாலும் இந்தியாவில் தங்கம் விலை பெருசா உயரல! காரணம் இதுதான்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட்












Click it and Unblock the Notifications