ஜம்மு காஷ்மீரில் பயங்கர மேகவெடிப்பு, நிலச்சரிவு.. சிதைந்த கட்டிடங்கள்.. 38 பேர் பலி.. ஷாக் வீடியோ!
காஷ்மீர்: உத்தரகாண்டை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பயங்கர மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மேக வெடிப்பால் பெரு மழை கொட்டி தீர்த்ததால், வெள்ளக்காடாக அப்பகுதி மாறியிருக்கிறது. மேலும் காஷ்மீரில் உள்ள சசோத்தி என்ற இடத்தில் நிலச்சரிவும் ஏற்பட்டதால் பல கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளன. அதில் பலர் சிக்கி மாயமாகியுள்ளதாகவும், 38 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என்றும் 133 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வெள்ள பாதிப்பில் சிக்கிய மக்களை மீட்பு குழுவினர் மீட்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீரின் சஷோதி பகுதியில் இன்று பிற்பகல் பயங்கர மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மேகவெடிப்பால் பெருவெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் உத்தரகாண்டில் நடைபெற்ற மேக வெடிப்பு ஏற்பட்டு பெருத்த சேதம் ஏற்பட்ட நிலையில், தற்போது இந்தியாவின் வட எல்லை மாநிலமான ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு ஏற்பட்டு உள்ளது.

புனித யாத்திரை செல்லும் இடம்
ஜம்மு காஷ்மீரில் பயங்கர மேக வெடிப்பு நிகழ்வு ஏற்பட்டுள்ளது. மேக வெடிப்பால் பெரு மழை கொட்டி தீர்த்ததால், வெள்ளக்காடாக அப்பகுதி மாறியிருக்கிறது. காஷ்மீரில் உள்ள சசோத்தி என்ற இடத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதில் கல் மணலோடு வெள்ளம் அடித்து வரப்பட்டதில் சில வீடுகள், கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளன.
இதில் பலர் சிக்கியிருக்கிலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 38 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 133 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், பலர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வெள்ள பாதிப்பு, நிலச்சரிவில் சிக்கிய மக்களை மீட்பு குழுவினர் மீட்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
Cloudburst in Padder, Jammu’s Kishtwar district. On the Machhail Mata route. Praying for everyone’s safety. pic.twitter.com/UvMeRdNVBy
— Manu Khajuria (@KhajuriaManu) August 14, 2025
கிஸ்த்வார் அருகே இமயமலை பகுதியில் இருக்கும் மாதா சந்தி கோவிலுக்கு புனித யாத்திரையாக மக்கள் செல்வது வழக்கம். இந்த புனித யாத்திரையின் துவக்க பகுதியாக சசோதி உள்ளது. இந்த பகுதியில் தான் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேக வெடிப்பு குறித்து, கிஸ்த்வார் துணை ஆணையர் பங்கஷ் சர்மா கூறியதாவது:- "சசோதி பகுதியில் பயங்கர வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மச்சைல் மாதா யாத்திரையின் துவக்க இடம் இதுவாகும். மீட்பு பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
மத்திய அமைச்சர் விளக்கம்
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இது தொடர்பாக கூறுகையில், "மேக வெடிப்பு நிகழ்வை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ஷர்மாவிடம் பேசியுள்ளேன். உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்க கூடும். மீட்பு பணிகளுக்காக படைகள் துரிதமாக அனுப்பப்பட்டுள்ளன. அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. எனது அலுவலகம் நேரடியாக உடனுக்கு உடன் தகவல்களை பெற்று வருகிறது. சாத்தியமான அனைத்து உதவிகளும் செய்யப்படும்" என்றார்.
கடந்த வாரம் உத்தரகாண்டின் உத்தர் காசி மாவட்டம் தாராலியில் மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால், ஒரு கிராமமே வெள்ளத்தில் மூழ்கியது. இந்த சம்பங்களில் மயமான பலரை தேடும் பணி தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஜம்மு காஷ்மீரிலும் மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
38 பேர் பலி?
மேக வெடிப்பால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 38 பேர் வரை பலியாகிருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 133 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், மேலும் பல காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- கிஸ்த்வாரின் சோசிட்டி பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டதாக வெளியான தகவல் வேதனை அளிக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் ஆழ்ந்த இரங்லை தெரிவிக்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில மீட்பு படை மற்றும் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நிவாரண பணிகளும் நடைபெறுகிறது" என்று கூறியுள்ளார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications