தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர்
டெல்லி: நீட் தேர்வு குளறுபடி, சிபிஎஸ்இ ஆகியவற்றில் நடந்த குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் அமைதி போராட்டம் நடத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது. இந்த அமைதி போராட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே இன்று இந்தியா வந்தார்.
டெல்லி வந்தது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஆப்ஜித் திப்கே, போராட்டத்திற்கு வருபவர்கள் அரசியலமைப்பையும் தேசியக்கொடியையும் கையில் எடுத்து வர மறந்துவிடாதீர்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்
சமூக வலைத்தளத்தில் தொடங்கப்பட்ட காக்ரோச் ஜனதா கட்சி இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலையில்லாத இளைஞர்கள் குறித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சொன்ன ஒரு கருத்தை தொடர்ந்து காக்ரோச் ஜனதா பார்டி என இன்ஸ்டகிராமில் ஆப்ஜித் தீப்கே என்பவர் கணக்கு தொடங்கினார்.
காக்ரோச் ஜனதா கட்சி என்ற பெயரில் இவர் தொடங்கிய இன்ஸ்டகிராமின் பக்கத்தில் பாலோயர்கள் எண்ணிக்கை பாஜகவை முந்தியது. இதையடுத்து, கணக்கு முடக்கப்பட்ட நிலையில் மீண்டும் புதிய ஐடியில் கணக்கு தொடங்கியது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி. இதிலும் பாலோயர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, நீட் தேர்வு மற்றும் சிபிஎஸ்இ குளறுபடி தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை அந்த கட்சி அறிவித்துள்ளது.
உங்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்
போராட்டத்திற்கு போலீசார் அனுமதி கொடுத்து இருப்பதாகவும் தனது எக்ஸ் தளத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. ஜந்தர் மந்தரில் பாதுகாப்புக்காக ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, அமெரிக்காவில் இருந்து ஆப்ஜித் தீப்கே இன்று காலை டெல்லி திரும்பினார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ஜந்தர் மந்தரில் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ஒரு புத்தகத்தையும் நமது மூவர்ணக் கொடியையும் எடுத்துவர மறக்காதீர்கள்! அன்பு மற்றும் நன்றியுணர்வின் அடையாளமாக, காவலர்களுக்கு மலர்களை வழங்குங்கள். அன்பு மற்றும் அமைதியுடன் நாம் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார். போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மூவர்ணக்கொடியுடன் இளைஞர்கள் அங்கு குவியத்தொடங்கியுள்ளனர். இதனால், டெல்லியில் இன்று காலையில் இருந்தே பரபரப்பான சூழல் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications