'மணிப்பூர் சர்ச்சை உத்தரவு'- நீதிபதி முரளிதரனின் சென்னை டிரான்ஸ்பர் கோரிக்கையை நிராகரித்த கொலிஜியம்!
டெல்லி: மணிப்பூர் வன்முறைகளுக்கு அடிப்படையாக இருப்பதாக விமர்சிக்கப்படும் உயர்நீதிமன்ற உத்தரவை பிறப்பித்த மணிப்பூர் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முரளிதரன் தம்மை சென்னைக்கு இடம் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் கொலிஜியம் நிராகரித்தது.
மணிப்பூரில் மைத்தேயி மக்களை பழங்குடிகள் பட்டியலில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் இறுதியில் அம்மாநில உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவின் அடிப்படையில் அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்க முயற்சித்தது.

மணிப்பூர் வன்முறையும் நெருக்கடியும்: இதற்கு குக்கி இனமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மணிப்பூர் மாநிலம் 6 மாதங்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. பல நூறு பேர் பலியாகி உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தும் அகதிகளாகவும் முகாம்களில் தங்கி உள்ளனர். இன்னமும் மணிப்பூர் வன்முறை ஓயவில்லை. இந்த விவகாரம் மத்திய அரசுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. மணிப்பூர் பிரச்சனையில் பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை என்பதற்காக அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றம் கொண்டு வரும் அளவுக்கு நிலைமை சீரியசானது.
நீதிபதி முரளிதரன் மாற்றம்: இந்நிலையில் மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரனை கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு இடம் மாற்றம் செய்தது உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம். கொலிஜியம்/ கொலீஜியம் என்பது நீதிபதிகள் நியமனம் தொடர்பான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான குழு. இந்த குழு அளிக்கும் பரிந்துரைகள் அடிப்படையில் மத்திய அரசு நீதிபதிகள் நியமனம்/ இடமாற்றம் குறித்து முடிவெடுக்கும் / ஒப்புதல் வழங்கும்/ நிராகரிக்கும்.
நீதிபதி முரளிதரன் கோரிக்கை நிராகரிப்பு: இதனிடையே நீதிபதி முரளிதரன், தம்மை சென்னை உயர்நீதிமன்றத்துக்கோ அல்லது மணிப்பூரிலோ தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என கொலிஜியத்திடம் கோரியிருந்தார். ஆனால் கொலிஜியம் இந்த கோரிக்கையை நிராகரித்தது. நீதிபதி முரளிதரனை கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி மத்திய அரசுக்கு கொலிஜியம் மீண்டும் பரிந்துரை வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் முறையீடு: மேலும் மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியாக முரளிதரனுக்கு பதில் சித்தார்த் மிருதுல் பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் 3 மாதங்களாகியும் இப்பரிந்துரை நடைமுறைக்கு வராதது தொடர்பாக ஒரு மனு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கொலிஜியம் பரிந்துரையை செயல்படுத்தாது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு தரப்பில் உரிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications