பிரதமர் மோடி, அஜித் தோவல் உள்ளிட்ட விவிஐபிகள் ரகசிய தகவல்கள் திருட்டு.. டெல்லி போலீஸ் ஷாக்
டெல்லி: பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரின் ரகசிய தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு இருந்த டெல்லி போலீஸ் இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லி போலீஸ் கூறுகையில், ''நடப்பு செப்டம்பர் மாதத்தில் பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முக்கிய விவிஐபிக்களின் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக செய்தி வெளியானது. பாதுகாப்பு மீறப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரகசியங்கள்
டெல்லியில் தேசிய தகவல் மையத்தில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்த தகவல்களை திருடியுள்ளனர். இந்த மையம்தான் மத்திய அரசின் தகவல் மற்றும் கம்யூனிகேஷன் தொழில்நுட்பங்களை பாதுகாத்து வருகிறது.

அமெரிக்க நிறுவனம்
இதுகுறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தவுடன் விசராணை மேற்கொண்டோம். தகவல்களை திருடிய மெயில் பெங்களூருவில் இருந்து வந்துள்ளது. பெங்களூருவில் இருக்கும் அமெரிக்க நிறுவனத்தில் இருந்து தேசிய தகவல் மையத்திற்கு இ மெயில் வந்துள்ளது. அந்த இ மெயிலை திறக்கும்போது, தேசிய தகவல் மையத்தின் தகவல்கள் அனைத்தும் அந்த இ மெயிலுக்கு சென்றுள்ளது. இ மெயில் ஐபி முகவரி பெங்களூருவில் இருந்துதான் கிடைத்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது'' என்றார்.

சென்ஹூவா
சீனாவில் இருக்கும் அரசு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான சென்ஹூவா இந்திய ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள், துணை ஜனாதிபதி, நடிகர்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள், வர்த்தக நிறுவனங்கள், முன்னாள் முதல்வர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரின் தகவல்களை திருடி இருப்பதாக செய்தி வெளியானது.

கமிட்டி
இதையடுத்து இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள ஒரு கமிட்டி அமைத்து இருப்பதாகவும், அந்தக் கமிட்டி 30 நாட்களுக்கும் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று நேற்று லோக் சபாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து இருந்தார்.

சீனா மறுப்பு
இந்த விஷயம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை மூலமாக சீன வெளியுறவுத்துறைக்கு எடுத்துச் சென்று இருப்பதாகவும் கூறி இருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்து, அந்த நிறுவனம் சீன நிறுவனம் அல்ல, தனியார் நிறுவனம் என்று கூறி இருந்ததாகவும் விளக்கம் அளித்து இருந்தார்.

டேட்டா மையம்
மேலும் வெளிநாட்டு முக்கிய தகவல் டேட்டா மையம் உலக அளவில் இருக்கும் 2.4 மில்லியன் தனிப்பட்ட நபர்களின் தகவல்களை திரட்டி வைத்து இருப்பதாகவும், இதற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்து இருந்தது.

டெல்லி போலீஸ்
இந்தியா சீனா இடையே எல்லையில் பதற்றம் நிலவி வருகையில் இந்திய முக்கிய தலைவர்களின் தகவல்களை சீன நிறுவனம் திருடி இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில்தான் டெல்லியில் இருக்கும் மையத்தின் தகவல்களும் திருடப்பட்டு இருப்பதை டெல்லி போலீஸ் உறுதி செய்துள்ளது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications