எம்.பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம்- ராஜ்யசபாவில் வெங்கையா நாயுடு விளக்கம்- எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
டெல்லி: ராஜ்யசபாவில் 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடவடிக்கையை திரும்பப் பெற போவது இல்லை என சபை தலைவர் வெங்கையா நாயுடு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆனால் எம்.பிக்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் ராஜ்யசபாவில் வெளிநடப்பு செய்தன.
ராஜ்யசபாவில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றத்தின் போது பெரும் அமளி ஏற்பட்டது. இதில் சபை தலைவரின் இருக்கையில் இருந்த மைக் உடைக்கப்பட்டது. வேளாண் மசோதாக்களின் நகல்கள் கிழித்து எறியப்பட்டன. சபை தலைவர் இருக்கையில் இருந்த துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாகவும் கூறப்பட்டது.

சஸ்பெண்ட் எம்.பிக்கள் போராட்டம்
இதனையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரெய்ன் உட்பட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யபட்டனர். இந்த 8 பேரும் நாடாளுமன்ற வளாகத்திலேயே விடிய விடிய அமர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த எம்.பி.க்களுக்கு ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் இன்று டீ கொடுத்து உபசரித்தது வியப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனை பிரதமர் மோடியும் பாராட்டி இருந்தார்.

குலாம் நபி ஆசாத் கோரிக்கை
இந்நிலையில் இன்று ராஜ்யசபாவில் எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தினார். எம்.பிக்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெறாவிட்டால் கூட்டத் தொடரை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்போம் என்றும் குலாம்நபி ஆசாத் கூறினார். மேலும், எம்.பிக்கள் பேசுவதற்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட வேண்டும்; 2 அல்லது 3 நிமிடங்களில் யாராலும் கருத்தை முழுமையாக தெரிவித்துவிட முடியாது என்றும் சுட்டிக்காட்டினார் குலாம்நபி ஆசாத்.

நடவடிக்கை ஏன்? வெங்கையா நாயுடு
இதற்கு ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு பதிலளிக்கையில், தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை எம்.பிக்களுக்கு எதிரானது அல்ல. அவர்களின் செயல்பாடுகளுக்கு எதிரானதுதான். 13 முறை ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் கேட்டுக் கொண்டும் எம்.பிக்கள் தங்களது இருக்கைக்கு செல்லாமல் அமளியில் ஈடுபட்டனர். இது ஆரோக்கியமானது அல்ல என கூறினார். வெங்கையா நாயுடுவின் இந்த பதிலை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி எம்.பிக்கள் ராஜ்யசபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தேவகவுடா வலியுறுத்தல்
இந்த நிகழ்வுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் பிரதமர் தேவகவுடா, எம்.பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும். இந்த பிரச்சனையில் ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும் என்றார். இதனிடையே சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி. டெரிக் ஓ பிரெய்ன், எங்களை சஸ்பெண்ட்தான் செய்ய முடியும்.. எங்கள் குரலை ஒடுக்க முடியாது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications