Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓயாத ராஜஸ்தான் காங்கிரஸ் மோதல்கள்..'நாட்டாமை’ ராகுல் டெல்லியில் கூட்டிய பஞ்சாயத்து.. ரிசல்ட் என்னவோ?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸில் உச்சகட்ட மோதல்கள் தொடருகிறது. இதனையடுத்து முதல்வர் அசோக் கெலாட், அதிருப்தி தலைவர் சச்சின் பைலட் மற்றும் அமைச்சர்கள் பலரும் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி இன்று நடத்தும் ஆலோசனை கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கிறது. பாஜகவோ, காங்கிரஸின் கோஷ்டி பூசல் போதும்.. ஆட்சி தங்கள் வசமாகும் என கனவு காண்கிறது.

Congress holds meeting on Rajasthan polls; Pilot, senior leaders present

காங்கிரஸ் மேலிடமோ தொடர்ந்து ராஜஸ்தான் உட்கட்சி மோதல்களை முடிவுக்கு கொண்டுவரப் போராடுகிறது. அண்மையில் டெல்லியில் முதல்வர் கெலாட், சச்சின் பைலட் உள்ளிட்டோரை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி நேரில் அழைத்து பேசினர். பின்னர் இருதரப்பும் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திக்கப் போவதாகவும் அறிவித்தனர். ஆனால் ராஜஸ்தான் போய் இறங்கியதும் சச்சின் பைலட் மீண்டும் கலகக் குரல் எழுப்ப தொடங்கினார்.

இந்நிலையில்தான் மீண்டும் டெல்லியில் காங்கிரஸ் மேலிடம் ஆலோசனைக்கு அசோக் கெலாட், சச்சின் பைலட் மற்றும் அமைச்சர்களை அழைத்துள்ளது. இன்றைய கூட்டத்துக்குப் பின் ராஜஸ்தான் நிலவரம் மாறும் என்கின்றனர் சீனியர் தலைவர்கள். இன்னொரு பக்கம் சச்சின் பைலட்டை சமாதானப்படுத்தும் வகையிலான முக்கிய அறிவிப்புகளை ராகுல் காந்தி வெளியிடுவார் எனவும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+