ஓயாத ராஜஸ்தான் காங்கிரஸ் மோதல்கள்..'நாட்டாமை’ ராகுல் டெல்லியில் கூட்டிய பஞ்சாயத்து.. ரிசல்ட் என்னவோ?
டெல்லி: சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸில் உச்சகட்ட மோதல்கள் தொடருகிறது. இதனையடுத்து முதல்வர் அசோக் கெலாட், அதிருப்தி தலைவர் சச்சின் பைலட் மற்றும் அமைச்சர்கள் பலரும் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி இன்று நடத்தும் ஆலோசனை கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கிறது. பாஜகவோ, காங்கிரஸின் கோஷ்டி பூசல் போதும்.. ஆட்சி தங்கள் வசமாகும் என கனவு காண்கிறது.

காங்கிரஸ் மேலிடமோ தொடர்ந்து ராஜஸ்தான் உட்கட்சி மோதல்களை முடிவுக்கு கொண்டுவரப் போராடுகிறது. அண்மையில் டெல்லியில் முதல்வர் கெலாட், சச்சின் பைலட் உள்ளிட்டோரை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி நேரில் அழைத்து பேசினர். பின்னர் இருதரப்பும் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திக்கப் போவதாகவும் அறிவித்தனர். ஆனால் ராஜஸ்தான் போய் இறங்கியதும் சச்சின் பைலட் மீண்டும் கலகக் குரல் எழுப்ப தொடங்கினார்.
இந்நிலையில்தான் மீண்டும் டெல்லியில் காங்கிரஸ் மேலிடம் ஆலோசனைக்கு அசோக் கெலாட், சச்சின் பைலட் மற்றும் அமைச்சர்களை அழைத்துள்ளது. இன்றைய கூட்டத்துக்குப் பின் ராஜஸ்தான் நிலவரம் மாறும் என்கின்றனர் சீனியர் தலைவர்கள். இன்னொரு பக்கம் சச்சின் பைலட்டை சமாதானப்படுத்தும் வகையிலான முக்கிய அறிவிப்புகளை ராகுல் காந்தி வெளியிடுவார் எனவும் கூறப்படுகிறது.
-
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications