"இந்தியா" கூட்டணி தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு! அடுத்தகட்ட திட்டம் என்ன தெரியுமா
டெல்லி: எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவராகக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதையே நீண்ட காலமாகப் பலரும் வலியுறுத்தி வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்படிப் பல எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கியது.

இந்தக் கூட்டணிக்கு "இந்தியா" என பெயரிடப்பட்டது. 2024 லோக்சபா தேர்தலுக்கான சீட் பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்கச் சமீபத்தில் முடிவு செய்தது. சீட் பங்கீடு விரைவாக முடிந்தால் தான் முழு வீச்சில் தேர்தலைக் குறிவைத்து பிரச்சாரம் செய்ய முடியும் என்பது அவர்கள் கணக்கு.
இந்தியா கூட்டணி: இதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் சீட் பங்கீடு தொடர்பாக ஒருமித்த கருத்தை எட்டுவதே இலக்காக இருந்தது. ஆனால் அது காங்கிரஸ் கட்சிக்கு அவ்வளவு ஈஸியாக இருக்கவில்லை. தொகுதிப்பங்கீட்டை விரைவாக முடித்து பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டும் என நினைத்தாலும் அது இழுபறியாகவே இருக்கிறது
கார்கே தேர்வு: இதற்கிடையே நிதிஷ்குமார் தொடங்கி பலரது பெயர் இதில் அடிப்பட்டது. இதற்கிடையே இதற்கு இப்போது பதில் கிடைத்துள்ளது. 'இந்தியா' கூட்டணி தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று காணொலி மூலம் நடந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரவுள்ளது.

நிதிஷ்குமார்: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையேற்கலாம் என கூறப்பட்டது. ஆனால் இன்றைய கூட்டத்தில் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்க வேண்டும் என்று நிதிஷ்குமாரே கூறியுள்ளார். அதேபோல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நிதிஷ்குமாரை அறிவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. யாரும் அவரது பெயருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இருப்பினும், திரிணாமுல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி மற்றும் சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ் ஆகியோருடன் விவாதித்து இறுதி முடிவு எடுப்பதாக கார்கே அறிவித்தார். இந்தியா கூட்டணியில் தலைவர் பதவிக்கு அடுத்தபடியாக இந்த ஒருங்கிணைப்பாளர் பதவி இருக்கும் என தெரிகிறது. இன்று நடந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!











Click it and Unblock the Notifications