வாரத்திற்கு 70 மணி நேர வேலை.. இதில் என்ன தப்பு இருக்கு.. காங்கிரசின் மனிஷ் திவாரி சொல்றதை பாருங்க!
டெல்லி: வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற இன்போசிஸ் நாராயண மூர்த்தியில் கருத்தில் எந்த தவறும் இல்லை எனவும் இந்தியா வல்லமை மிக்க நாடாக மாற வேண்டும் என்றால் ஒன்று அல்லது இரண்டு தலைமுறையினர் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மனிஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் வாரத்திற்கு 48 மணி நேரம் பணி என்பதை தொழிலாளர் சட்டங்கள் வரையறுத்துள்ளன. இந்த நிலையில் வேலை நேரத்தை உயர்த்த வேண்டும். அப்போதுதான் உற்பத்தியை உயர்த்த முடியும் என்று தனியார் நிறுவனங்கள் பல கோரிக்கைகள் வைப்பதை காண முடிகிறது. இதற்கு கடுமையான எதிர்ப்புகளும் கிளம்பி வருகிறது. இந்த நிலையில் தான் கடந்த மாதம் பிரபல தொழில் அதிபர் இன்போசிஸ் நாராயண மூர்த்தி , ஊழியர்களின் பணி நேரம் குறித்து வெளியிட்ட கருத்து சர்ச்சையை கிளப்பியது.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாராயண மூர்த்தி கூறுகையில், "பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் வேலை உற்பத்தித் திறன் குறைவாக உள்ளது. பிற நாடுகளுடன் போட்டி போட நாம் தயாராக இருக்க வேண்டும். நமது இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்யத் தயாராக இருக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். நாராயண மூர்த்தியின் இந்தக் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் எழுந்துள்ளன.
ஒலா நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட சிலர் நாராயண மூர்த்தியின் கருத்தை வரவேற்றுள்ளனர். அதேநேரம் பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிராகவே கருத்து கூறியுள்ளனர். குறிப்பாக 70 மணி நேரம் வேலை செய்தால் குடும்பத்தினருடன் சுத்தமாக நேரத்தைச் செலவிட முடியாது என்பது இயந்திரத்தனமான வாழ்க்கையாக மாறிவிடும் என்பதே அவர்கள் முன்வைக்கும் கருத்தாக உள்ளது.
ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரத்தை தாண்டி தனியார் நிறுவனங்கள் வேலை வாங்குவதாகும் 70 மணி வேலை என்பது இந்தியா போன்ற நாடுகளுக்கு சரிபட்டு வராது எனவும் நெட்டிசன்கள் பலரும் நாராயண மூர்த்தியை வசைபாடினர். இது தொடர்பான விவாதங்கள் நீடித்துக் கொண்டு இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மனிஷ் திவாரி நாராயண மூர்த்தியின் கருத்துக்கு ஆதரவாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக மனிஷ் திவாரி கூறுகையில், " வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற நாராயண மூர்த்தியின் கருத்துக்கு எதிர்வினையாற்றுவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் சொன்னதில் என்ன தவறு உள்ளது. இந்தியா உண்மையிலெயே வல்லமை மிக்க நாடாக மாற வேண்டும் என்றால் ஒன்று அல்லது இரண்டு தலைமுறையினர் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். வாரத்திற்கு ஒருநாள் விடுமுறையுடன் 70 மணி நேர வேலை & வருடத்திற்கு 15 நாட்கள் விடுமுறை என்பது கண்டிப்பாக விதிமுறைகளாக கொண்டு வரவேண்டும்" என்றார்.
-
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications