திமுகவை பின்பற்றும் காங்கிரஸ்.. புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து.. ராகுல் வாக்குறுதி!
புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
Recommended Video

டெல்லி: புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த அறிக்கையை வெளியிட்டார்.

இந்த தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்ட 15 முக்கிய உறுப்பினர்கள் சேர்ந்து உருவாக்கி இருக்கிறார்கள். இதில் பலதரப்பட்ட பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தப்பட்டு இருக்கிறது.
மிக முக்கியமாக மாநிலம் சார்ந்த பிரச்சனைகள், மாநில கோரிக்கைகள், சுயாட்சி தத்துவத்திற்கு மதிப்பளிக்கும் விதத்தில் நிறைய வாக்குறுதிகள் உள்ளது. இது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
அதில் ஒன்றாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இது பல வருடங்களாக புதுச்சேரி மக்களின் கோரிக்கை ஆகும்.
திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்று கூறி இருந்தது. தற்போது காங்கிரஸ் கட்சி அதே தேர்தல் வாக்குறுதியை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications