மகாராஷ்டிராவை போல் கூட்டணி ஆட்சி.. ஆம் ஆத்மியுடன் கைகோர்க்க காங். வியூகம்.. டெல்லியில் ட்விஸ்ட்?
டெல்லி: மகாராஷ்டிரத்தை போல் கூட்டணி ஆட்சியில் இடம் பிடிக்க டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கைகோர்க்க காங்கிரஸ் வியூகம் வகுப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவரின் கருத்தில் இருந்து புலப்படுகிறது.
டெல்லியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஏராளமான நிறுவனங்கள் எக்சிட் போல் என சொல்லப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன.
இந்த கணிப்புகளில் ஆம் ஆத்மி கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் என கூறப்பட்டுள்ளது.

கருத்து கணிப்பு
டெல்லியில் ஆட்சியை பிடிக்க மொத்தமுள்ள 70 தொகுதிகளில் எந்த ஒரு கட்சி 36 இடங்களில் வெற்றி பெறுகிறதோ அந்க கட்சியே ஆட்சி அமைக்கும். அந்த வகையில் இந்தியா டுடே, ரிபப்ளிக் டிவி ஜன்கீ பாத், ஏபிபி சி வோட்டர், டைம்ஸ் நவ், டிவி9, இந்தியா டிவி, நியூஸ் எக்ஸ் நேத்தா, சுதர்சன் நியூஸ், நியூஸ் 24 உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.

கணிப்புகள்
அதில் ஆம் ஆத்மி கட்சிக்கு 40 முதல் 68 இடங்கள் வரை கிடைக்கும் என அவை கணித்துள்ளன. அது போல் பாஜகவுக்கு 2 முதல் 28 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு 1 முதல் 4 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் கணித்துள்ளன. காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெறாது என்றும் கணிப்புகள் கூறுகின்றன.

முஸ்லீம் வாக்குகள்
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்த பாஜகவை பழி வாங்க காங்கிரஸை காட்டிலும் ஆம் ஆத்மியை ஆதரிப்பதே புத்திசாலித்தனம் என கருதிய 60- சதவீதத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம் வாக்காளர்கள் கருதியது சர்வே மூலம் தெரியவந்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு காலம் காலமாக இருந்த முஸ்லீம் வாக்குகளும் கிடைத்திருக்காது என சொல்லப்படுகிறது.

கூட்டணி
மிகவும் சொற்ப மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் நிலையில் கூட்டணி ஆட்சியிலாவது இடம் பெற வேண்டும் என்ற நிலைக்கு காங்கிரஸ் வந்துவிட்டது. அதற்கு அக்கட்சியின் தலைவர் அளித்துள்ள பேட்டியே சாட்சி. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி சி சாக்கோ கூறுகையில் காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் இணைந்து கூட்டணி அமைக்குமா என கேட்கிறீர்கள்.

வெற்றி
அது தேர்தல் முடிவுகளை வைத்தே முடிவு செய்யப்படும். தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் அதுகுறித்து முடிவு ஆலோசனை செய்வோம். கருத்து கணிப்புகள் எல்லாம் சரியாக இருக்காது என நான் கருதுகிறேன். கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்ட இடங்களை விட காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என நான் நம்புகிறேன் என்றார்.
|
கெஜ்ரிவால்
ஒரு வேளை காங்கிரஸ் கட்சி மிகவும் குறைந்த அளவிலான தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்கும் என்றே தெரிகிறது. மகாராஷ்டிரத்தில் சிவசேனாவின் வேண்டுகோளை ஏற்று அக்கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்து அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளது. ஆனால் டெல்லியில் ஆம் ஆத்மி தனிபெரும்பான்மை பலத்துடன் ஆட்சி பெற்றாலும் தலைநகர் டெல்லியில் ஆட்சியில் இருக்க தானாக வலிய போய் கெஜ்ரிவாலுடன் கூட்டணிக்கு பேசலாம் என தெரிகிறது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications