2014 காங்கிரஸ் தோல்விக்கு அமெரிக்கா, இஸ்ரேல் உளவுத்துறையே காரணம்.. மாஜி எம்பி குற்றச்சாட்டு!
டெல்லி: 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு சிஐஏ மற்றும் மொசாட் உள்ளிட்ட இரு உளவு அமைப்புகளின் சதியே காரணம் என்று காங்கிரஸ் முன்னாள் எம்பி குமார் கேத்கர் குற்றம்சாட்டியுள்ளார். இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று மத்தியில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை அமைத்திருக்கிறது. 2014ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் மோடி பொறுப்பேற்றார். அதேபோல் கடந்த முறையை போல் இம்முறை பாஜகவால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்க முடியவில்லை.

அதேபோல் கடந்த இரு தேர்தல்களை காட்டிலும் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளை வென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் நாடு இந்திய அரசமைப்பு சட்ட நாள் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பாக டெல்லியில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி குமார் கேத்கர் பேசிய கருத்து விவாதமாகி இருக்கிறது.
அதில் காங்கிரஸ் முன்னாள் எம்பி குமார் கேத்கர் பேசுகையில், 2004 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 145 இடங்களையும், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 206 இடங்களையும் வென்றது. இந்த போக்கின்படி, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 250 இடங்களை வென்று ஆட்சியைத் தக்கவைத்திருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வெறும் 44 இடங்களாக குறைந்தது.
அப்போதுதான் சில அமைப்புகளின் ஆட்டம் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியை வீழ்த்தாமல், இந்தியாவிற்குள் எந்த விளையாட்டையும் நம்மால் ஆட முடியாது என்று சில அமைப்புகள் செயல்பட்டன. அவற்றில் ஒன்று சிஐஏ.. மற்றொன்று இஸ்ரேலின் மொசாட் அமைப்பு.. இந்த இரு அமைப்புகளும் இந்தியாவில் ஏதேனும் செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருந்தன.
மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அவர்களால் இந்தியாவில் தலையிட்டு தங்கள் கொள்கைகளைச் செயல்படுத்த முடியாது என்று கருதினார்கள். இந்த இரு உளவு முகமைகளும், டெல்லியில் தங்களுக்குச் சாதகமான ஒரு அரசு தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் கருதினர். ஆனால் அது காங்கிரஸ் அரசாக இருக்கக் கூடாது என்றும் நினைத்தனர்.
இதையடுத்து சிஐஏ மற்றும் மொசாட் ஆகிய இரு அமைப்புகளிடமும் இந்திய மாநிலங்கள் மற்றும் தொகுதிகள் பற்றிய துல்லியமான தரவுகள் இருந்தன. அதேபோல் 2014ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மீது அதிருப்தி இருந்தது உண்மைதான். ஆனால் அது காங்கிரஸ் கட்சியின் வெற்றியை 206ல் இருந்து 44 ஆகக் குறைக்கும் அளவுக்குப் பெரியதல்ல.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கூட கோரும் அளவுக்குக் காங்கிரஸ் கட்சிக்கு எண்ணிக்கை இல்லாமல் போனது. அந்த தேர்தல் முடிவுகள் மக்களின் தீர்ப்பாக இல்லை என்று தெரிவித்தார். குமார் கேத்கரின் கருத்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மத்தியில் விவாதமாகி இருக்கிறது.
-
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications