Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2014 காங்கிரஸ் தோல்விக்கு அமெரிக்கா, இஸ்ரேல் உளவுத்துறையே காரணம்.. மாஜி எம்பி குற்றச்சாட்டு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு சிஐஏ மற்றும் மொசாட் உள்ளிட்ட இரு உளவு அமைப்புகளின் சதியே காரணம் என்று காங்கிரஸ் முன்னாள் எம்பி குமார் கேத்கர் குற்றம்சாட்டியுள்ளார். இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று மத்தியில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை அமைத்திருக்கிறது. 2014ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் மோடி பொறுப்பேற்றார். அதேபோல் கடந்த முறையை போல் இம்முறை பாஜகவால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்க முடியவில்லை.

Congress CIA BJP 2014 Lok Sabha polls

அதேபோல் கடந்த இரு தேர்தல்களை காட்டிலும் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளை வென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் நாடு இந்திய அரசமைப்பு சட்ட நாள் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பாக டெல்லியில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி குமார் கேத்கர் பேசிய கருத்து விவாதமாகி இருக்கிறது.

அதில் காங்கிரஸ் முன்னாள் எம்பி குமார் கேத்கர் பேசுகையில், 2004 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 145 இடங்களையும், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 206 இடங்களையும் வென்றது. இந்த போக்கின்படி, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 250 இடங்களை வென்று ஆட்சியைத் தக்கவைத்திருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வெறும் 44 இடங்களாக குறைந்தது.

அப்போதுதான் சில அமைப்புகளின் ஆட்டம் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியை வீழ்த்தாமல், இந்தியாவிற்குள் எந்த விளையாட்டையும் நம்மால் ஆட முடியாது என்று சில அமைப்புகள் செயல்பட்டன. அவற்றில் ஒன்று சிஐஏ.. மற்றொன்று இஸ்ரேலின் மொசாட் அமைப்பு.. இந்த இரு அமைப்புகளும் இந்தியாவில் ஏதேனும் செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருந்தன.

மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அவர்களால் இந்தியாவில் தலையிட்டு தங்கள் கொள்கைகளைச் செயல்படுத்த முடியாது என்று கருதினார்கள். இந்த இரு உளவு முகமைகளும், டெல்லியில் தங்களுக்குச் சாதகமான ஒரு அரசு தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் கருதினர். ஆனால் அது காங்கிரஸ் அரசாக இருக்கக் கூடாது என்றும் நினைத்தனர்.

இதையடுத்து சிஐஏ மற்றும் மொசாட் ஆகிய இரு அமைப்புகளிடமும் இந்திய மாநிலங்கள் மற்றும் தொகுதிகள் பற்றிய துல்லியமான தரவுகள் இருந்தன. அதேபோல் 2014ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மீது அதிருப்தி இருந்தது உண்மைதான். ஆனால் அது காங்கிரஸ் கட்சியின் வெற்றியை 206ல் இருந்து 44 ஆகக் குறைக்கும் அளவுக்குப் பெரியதல்ல.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கூட கோரும் அளவுக்குக் காங்கிரஸ் கட்சிக்கு எண்ணிக்கை இல்லாமல் போனது. அந்த தேர்தல் முடிவுகள் மக்களின் தீர்ப்பாக இல்லை என்று தெரிவித்தார். குமார் கேத்கரின் கருத்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மத்தியில் விவாதமாகி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+