சீட்டுகளில் ரொம்பவே சீண்டும் "இந்தியா" கூட்டணி கட்சிகள்"- டெல்லி காங். முன்வைக்கும் தடாலடி பார்முலா!
டெல்லி: "இந்தியா" கூட்டணி கட்சிகள் தொகுதிப் பங்கீட்டு விவகாரத்தில் அதீதமாக உதாசீனப்படுத்துவதால் ஒவ்வொரு மாநிலத்துக்கும் கறார் பார்முலா ஒன்றை டெல்லி ஆலோசனைக் கூட்டத்தில் உருவாக்கி இருக்கிறதாம் காங்கிரஸ்.
"இந்தியா" கூட்டணியில் நடைபெற்று வரும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை ஆகியவை தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்து மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

டெல்லி ஆலோசனைக் கூட்டத்தில் மணிப்பூர் முதல் மும்பை வரையிலான ராகுல் காந்தியின் பேருந்து யாத்திரையை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் பாரத் நியாய யாத்திரை என்பது பாரத் ஜோடோ நியாய யாத்திரை என பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் "இந்தியா" கூட்டணி கட்சிகள் சொற்பமான லோக்சபா தொகுதிகளையே ஒதுக்குவதாக காங்கிரஸ் நிர்வாகிகள் குமுறலைக் கொட்டித் தீர்த்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் வெறும் 2 சீட் தான் தர முடியும் என மமதா பானர்ஜி தெரிவித்திருப்பது எல்லாம் ரொம்பவே சீண்டிப் பார்ப்பதாக இருக்கிறது எனவும் அம்மாநில தலைவர்கள் கொந்தளித்திருக்கின்றனர்.
இதனையடுத்து ஒவ்வொரு மாநிலத்துக்குமான உத்தேச தொகுதிப் பங்கீடு ஒன்றை டெல்லி காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டதாம். பீகாரில் "இந்தியா" கூட்டணியில் 25 தொகுதிகளில் பேச்சுவார்த்தையை தொடங்கலாம் என முடிவு செய்திருக்கிறதாம் காங்கிரஸ். அதே நேரத்தில் பீகாரில் ஆர்ஜேடி, ஜேடியூ, இடதுசாரிகள் என அனைத்தும் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்வது உறுதியானால் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 10 முதல் 12 தொகுதிகளைப் பெற்றாக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் 12 இடங்களில் காங்கிரஸ்; 2 இடங்களில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா போட்டியிடும் என்கிறது அம்மாநில பார்முலா. மேற்கு வங்கத்தில் குறைந்தபட்சம் 6 தொகுதிகளையாவது கொடுத்தால்தான் திரிணாமுல் காங்கிரஸுடனான கூட்டணியில் இருக்க முடியும் என முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதாம்.
தமிழ்நாட்டில் 15 தொகுதிகளில் தொடங்கி 10 தொகுதிகளில் நிற்பது என திட்டமிட்டுள்ளதாம் காங்கிரஸ். தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெல்வது உறுதி என்பதால் கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படும் நிலையில் அப்போதைய சூழ்நிலை அடிப்படையில் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் காத்திருக்கவும் தீர்மானித்துள்ளனராம். அத்தனை மாநிலங்களிலும் ஜனவரி 3-வது வாரத்தில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை முடிக்க வேண்டும் எனவும் டெல்லி ஆலோசனைக் கூட்டம் அறிவுறுத்தி உள்ளதாம்.
-
காமராஜருக்கு தலைவலியாக மாறிய தொற்று நோய்.. ‘இன்புளுயன்ஸா’ நகரமாக அறிவிக்கப்பட்ட சென்னை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications