காங்கிரஸுக்கு எத்தனை இடம் கிடைக்கும் தெரியுமா? ராகுல் காந்தி கனவில் இடியை தூக்கிப் போட்ட மோடி!
டெல்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 40 சீட் கூட கிடைக்காது; உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட தேறாது என பிரதமர் மோடி தமது கணிப்பை தெரிவித்துள்ளார்.
18-வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, மே 13 என 4 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. இன்னும் 3 கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளன.

லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பாக India Today சேனலுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என தேர்தல் பணியாற்றி வருகிறோம். காங்கிரஸ் கட்சியால் ஒரு காலத்திலும் இந்த இடங்களைப் பெறவே முடியாது.
காங்கிரஸின் ராகுல் காந்தி வயநாடு தொகுதியை விட்டு விரட்டப்பட்டுவிட்டார். அதனால்தான் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார். உத்தரப்பிரதேசத்து மக்கள் இப்போது வயநாட்டை விட்டு ராகுல் ஓடிவந்தது தொடர்பாக கேள்வி எழுப்புகின்றனர். இதுவரை அமேதி தொகுதி பக்கம் கூட ராகுல் காந்தி தலைவைத்துப் படுக்கவே இல்லையே..
உத்தரப்பிரதேசத்து மக்கள் ஒரு போதும் வாரிசு அரசியலை ஏற்கவே மாட்டார்கள். மக்களின் வாழ்க்கையை மாற்றக் கூடிய மாற்று நம்பிக்கையை மாற்று சக்தியை உ.பி. மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சிக் காலத்தின் வளர்ச்சித் திட்டங்களையும் அனுபவிக்கின்றனர்.
காசியின் வளர்ச்சி, மேம்பாடு தொடர்பாக என்னுடைய தாயார் என்னிடம் கேள்வி எழுப்பினார். அப்போது உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி அரசு இருந்ததால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்றேன். உ.பி.யில் பாஜக ஆட்சி அமைத்ததும் காசியை மேம்படுத்துவேன் என்றேன். தற்போது அதை செய்து கொண்டிருக்கிறோம்.
காங்கிரஸ் கட்சிக்கு சமமாக அல்லது நெருக்கமாக மாநில கட்சிகள் தேர்தலில் அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என சரத்பவார் தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பாஜகவை தனித்து எதிர்கொள்ள முடியாது என்பதையே சரத்பவாரின் கருத்துகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications