அடக்குமுறை.. இரவோடு இரவாக இந்தியர்களின் உரிமைகளை பறித்த காங்கிரஸ்.. ஆவேசமாக சொல்கிறார் அமித்ஷா!
டெல்லி : எமர்ஜென்சி என்ற பெயரில் அரசியல் சாசன உரிமைகளை காங்கிரஸ் கட்சி பறித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.
எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டு 47வது நினைவு நாளான இன்று காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளார் அமித்ஷா.
ஒவ்வொரு இந்தியரின் உரிமைகளையும் பறித்து அடக்குமுறைகளில் அந்நிய ஆட்சியை மிஞ்சியது காங்கிரஸ் என உள்துறை அமைச்சர் அமித்ஷா சாடியுள்ளார்.

எமர்ஜென்சி
இந்தியாவில் 1975 ஜூன் 25ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் ஃபரூக் அலி அகமது, அவசர நிலையை பிரகடனம் செய்தார். உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நேர்ந்துவிட்டதாகக் கூறி இந்த நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. 1977 மார்ச் மாதம் வரை சுமார் 21 மாதங்கள் இந்த அவசரநிலை நீடித்தது.

கைது
எமர்ஜென்சி அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். செய்தித்தாள்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டன. நாட்டில் எமர்ஜென்சி காலத்தில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய அல்லது குரல் எழுப்பிய ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அமித்ஷா
இன்று அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதன் 47வது நினைவு நாள். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், 1975 ஆம் ஆண்டு இதே நாளில், அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ், ஒவ்வொரு இந்தியனின் அரசியலமைப்பு உரிமைகளையும் இரவோடு இரவாகப் பறித்து, எமர்ஜென்சியை விதித்தது.

அடக்குமுறை
ஒவ்வொரு இந்தியரின் உரிமைகளையும் பறித்து அடக்குமுறைகளில் அந்நிய ஆட்சியை மிஞ்சியது காங்கிரஸ். சர்வாதிகார மனநிலைக்கு எதிராகப் போராடி ஜனநாயகத்தை மீட்டெடுக்க தங்கள் வாழ்வை அர்ப்பணித்த அனைத்து தேசபக்தர்களுக்கும் சல்யூட்" எனப் பதிவிட்டுள்ளார்.

ராஜ்நாத் சிங்
இதேபோல, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பதிவில், 47 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டதை ஒருபோதும் மறக்க முடியாது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு மக்கள் தங்களை அர்ப்பணித்து, அரசியலமைப்பு மற்றும் நிறுவனங்களின் கண்ணியத்தைப் பேண உறுதிமொழி எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
-
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்!












Click it and Unblock the Notifications