ஒரே குழப்பமா இருக்கே? திடீரென சரிந்த கொரோனா பாதிப்பு! ஆனாலும் ஒரு சிக்கல்.. முழு விவரங்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக 8 ஆயிரம் என்ற அளவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று வெகுவாக குறைந்து 6594 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் சிகிச்சை பெருவோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக அளவில் பலத்த பொருளாதார இழப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி கோரத்தாண்டவம் ஆடியது.

சுமார் மூன்று வருடங்களாக கொரோனாவின் தாக்கம் நீடித்து வரும் நிலையில் மூன்றாவது அலை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

இந்நிலையில் தற்போது கடந்த ஒரு மாதமாக சிறிது சிறிதாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கேரளா, மகராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. சுகாதார அமைச்சகம் நேற்று ம்ற்றும் நேற்று முன் தினம் வெளியிட்ட அறிவிப்பின்படி சுமார் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவானது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் சரிந்துள்ளது.

6594 பேர் பாதிப்பு

6594 பேர் பாதிப்பு

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6594 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் பாதிப்பு எண்ணிக்கை 8,582 ஆகவும், நேற்று 8,084 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிகிச்சை பெறுவோர்

சிகிச்சை பெறுவோர்

கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 747 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் 50 ஆயிரத்து 548 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 4,035 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்.

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,61,370 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் சுமார் 15 லட்சத்து 40 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும், மொத்தம் 195. கோடியே 35 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+