இந்தியாவில் சமூகப் பரவல் இல்லை- 24 மணிநேரத்தில் 1,396 பேருக்கு கொரோனா- மத்திய அரசு
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,396 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,892 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 1,396 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 27,892 ஆகும். இன்று ஒரே நாளில் 381 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6184. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 872. தற்போதைய நிலையில் 20,835 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் என்பது 22.17% ஆக உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 16 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக ஒருவர் கூட புதியதாக பாதிக்கப்படவில்லை. அதேநேரத்தில் மகாராஷ்டிராவில் கோண்டியா, கர்நாடகாவின் தேவங்கரே, பீகாரின் லாகி சராய் மாவட்டங்களில் புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
Recommended Video
கடந்த 14 நாட்களில் 85 மாவட்டங்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இந்தியாவில் சமூகப் பரவலே இல்லை. அதேபோல் கொரோனா பரவக் கூடிய பகுதிகள் என்று எதுவும் வரையறுக்கவும் இல்லை. இவ்வாறு லாவ் அகர்வால் கூறினார்.












Click it and Unblock the Notifications