மோசமாகும் நிலைமை.. இந்தியாவில் 6 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. மொத்தமாக 17848 பேர் பலி
டெல்லி: இந்தியாவில் கொரோனா காரணமாக பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டி உள்ளது.இந்தியாவில் கொரோனா காரணமாக 604808 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. நாளுக்கு நாள் கேஸ்கள் தீவிரமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஆறாவது லாக்டவுன் இந்தியாவின் கட்டுப்பாட்டு பகுதிகளில் அமலில் உள்ள நிலையிலும் கூட கேஸ்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 19016 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

12052 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மடடும் 438 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் மொத்தம் ஆக்டிவ் நோயாளிகள் 227003 பேர் உள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 359891 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். இதுவரை கொரோனா காரணமாக இந்தியாவில் 17848 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிராவில்தான் அதிக பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக 180298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை மொத்தம் 8053 பேர் பலியாகி உள்ளனர், 198 பேர் இன்று மட்டும் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா காரணமாக 94049 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு இதுவரை மொத்தம் 1264 பேர் பலியாகி உள்ளனர், 63 பேர் இன்று மட்டும் பலியாகி உள்ளனர்.
டெல்லியில் கொரோனா காரணமாக 89802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு இதுவரை மொத்தம் 2803 பேர் பலியாகி உள்ளனர், 61 பேர் இன்று மட்டும் பலியாகி உள்ளனர். குஜராத்தில் கொரோனா காரணமாக 33318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை மொத்தம் 1869 பேர் பலியாகி உள்ளனர், 21 பேர் இன்று மட்டும் பலியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications