196 நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24 லட்சத்தை தாண்டியது- 50 ஆயிரத்தை நோக்கி உயிரிழப்புகள்
டெல்லி: இந்தியாவில் கொரோனாவின் முதல் பாதிப்பு தொடங்கியதில் இருந்து தற்போதைய 196 நாட்களில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24 லட்சத்தை தாண்டியுள்ளது.
Recommended Video
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ஆகஸ்ட் 13-ந் தேதி அறிக்கையின்படி இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6,53,622.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 16,95,982. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47,703. மொத்தம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,96,637.

24 லட்சத்தை தாண்டியது
இதனைத் தொடர்ந்து மாநிலங்கள் வியாழக்கிழமை மாலை 24 மணிநேர பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்களை வெளியிட்டன. இதனால் இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24 லட்சத்தை தாண்டியதாகிவிட்டது. ஆந்திராவில் 24 மணிநேரத்தில் புதியதாக 9996 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் 82 பேர் கொரோனாவால் மரணித்து போயினர். ஆந்திராவில் கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 2,74,138 ஆக அதிகரித்தது.

தமிழகத்தில் 5835
தமிழகத்தில் வியாழன்று மட்டும் 5835 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 119 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.20 லட்சத்தை எட்டியது. தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 5397.

பிற மாநில பாதிப்பு நிலவரம்
மகாராஷ்டிராவில் 11,813; கர்நாடகாவில் 6,706; டெல்லியில் 956 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. உ.பியில் 4,537, மேற்கு வங்கத்தில் 2997; பீகாரில் 3,906; தெலுங்கானாவில் 1931 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக வியாழன்று மாலை அறிவிக்கப்பட்டது. குஜராத்தில் 1,092 பேருக்கும் அஸ்ஸாமில் 2,796 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

50 ஆயிரத்தை நெருங்கும் மரணங்கள்
இந்தியாவில் தற்போதைய நிலையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24,59,613; அதாவது கேரளாவில் முதலாவது கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்து 196வது நாளில் இந்த எண்ணிக்கை எட்டப்பட்டிருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 17,50,636. கொரோனாவால் மாண்டவர்கள் எண்ணிக்கை 48,144. கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6,60,348 மட்டும்.
-
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம்












Click it and Unblock the Notifications