இந்தியாவில் 3.37 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு.. ஒரே நாளில் 488 பேர் உயிரிழப்பு..!
இந்தியாவில் நோய்த் தொற்றுக்கு 488 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர்
டெல்லி: நாடு முழுவதும் ஒரே நாளில் 3 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு கொரோனாவைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. 24 மணி நேரத்தில் நோய்த்தொற்றுக்கு 488 பேர் உயிரிழந்துள்ளனர்..
நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு இந்தியாவில் உயர்ந்து கொண்டே வருகிறது.. இதை கட்டுப்படுத்த மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை கையில் எடுத்து வருகிறது..
Recommended Video
கொரோனா தினசரி பாதிப்பு கடந்த 3 நாட்களாக கடுமையாக உயர்ந்த நிலையில், நேற்று ஓரளவு குறைந்துள்ளது.. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளது.. அந்த அறிக்கை இதுதான்:

பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,37,704 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.. இதையடுத்து மொத்த கொரோனா தொற்று பாதிப்பு 3 கோடியே 89 லட்சத்து 3 ஆயிரத்து 731 ஆக உயர்ந்துள்ளது.. கடந்த 17-ந்தேதி நிலவரப்படி, தினசரி பாதிப்பு 2.38 லட்சமாக இருந்தது... இது அடுத்தநாள் 2.82 லட்சமாகவும், அதற்கு அடுத்த நாள், 3.17 லட்சமாகவும் உயர்ந்தது.. நேற்று முன்தினம் இந்த தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது 3.47 லட்சமாக காணப்பட்டது.. இந்த எண்ணிக்கைதான் நேற்றை தினம் ஓரளவு குறைந்து காணப்பட்டது.

இந்தியா
நேற்று முன்தினம் 19,35,912 கொரோனா டெஸ்ட்கள் செய்யப்பட்டிருந்தன.. இதன்மூலம் தினசரி கேஸ்களின் பாதிப்பானது, 17.94 சதவீதத்தில் இருந்து 17.22 ஆக குறைந்தது.. இந்தியாவிலேயே தொற்று வைரஸ் அதிகமாக பாதித்த முதல்மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.. மொத்தம் 48,270 பேர் இங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்... புனே நகரத்தில் ஒருநாள் பாதிப்பு 16,618 ஆக உயர்ந்துள்ளது..

கேரளா
இதற்கு அடுத்ததாக கர்நாடகாவில் 48,049 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன.. கேரளாவில் 41,668 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. தமிழகத்தில் தொற்று பாதிப்பு 29,870 ஆக உயர்ந்துள்ளது.. குஜராத் மாநிலத்தில் 21,225 பேருக்கும் ராஜஸ்தானில் 16,878 பேருக்கும், உபியில் 16,159 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.... ஒரே நாளில் கொரோனாவைரஸுக்கு 488 பேர் உயிரிழந்துள்ளனர்..

ஒமிக்ரான் வைரஸ்
இப்போதைக்கு 3,63,1482 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.. தற்போது 21,13,365 பேர் இன்னமும் சிகிச்சையில் உள்ளனர்.. அதேபோல ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,050 ஆக உயர்ந்துள்ளது... நாடு முழுவதும் நேற்று 67,49,746 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.. இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 161 கோடியே 16 லட்சத்தை தாண்டிவிட்டது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications