இந்தியாவில் கொரோனாவால் 377 பேர் பலி; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,439 ஆக அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 377 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,439 ஆகவும் உயர்ந்துள்ளது.

Recommended Video

    ஆசியாவிலேயே இந்தியா தான் மோசம்... அதிர வைக்கும் புள்ளி விவரங்கள்

    மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு 178 பேர் பலியாகி உள்ளனர்.

    Coronavirus cases in India cross 11400

    இம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2687 ஆக உள்ளது. இதனையடுத்து 30 பேர் உயிரிழந்த டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1561 ஆக உள்ளது.

    தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 12; மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை - 1204. ராஜஸ்தானில் 3 பேர் பலியான போதும் கொரோனாவின் உக்கிரம் அதிகமாக இருக்கிறது. அங்கு 969 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மத்திய பிரதேசத்தில் 50 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்திருக்கின்றனர். இம்மாநிலத்தில் 730 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கேரளாவில் 387 பேரும் கர்நாடகாவில் 260 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

    28 பேரை பலி கொண்ட குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 650. இதனிடையே மேகாலயாவில் கொரோனாவுக்கு முதலாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 69 வயது மருத்துவர் மரணமடைந்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+