மே 3க்கு பின் புது விதிமுறைகள்.. ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வு.. உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!
நாடு முழுக்க ஊரடங்கு கட்டுப்பாட்டில் சில மாவட்டங்களில் மே 3ம் தேதிக்கு பிறகு தளர்வு அறிவிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
டெல்லி: நாடு முழுக்க ஊரடங்கு கட்டுப்பாட்டில் சில மாவட்டங்களில் மே 3ம் தேதிக்கு பிறகு தளர்வு அறிவிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக நாடு முழுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த, நோயை கட்டுப்படுத்தவும் நாடு முழுக்க 40 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 வாரம் முன் ஊரடங்கு குறித்து அறிவிப்பு வெளியிட்ட பிரதமர் மோடி, ஹாட் ஸ்பாட் பகுதிகளில் எப்போதும் போல ஊரடங்கு மே 3ம் தேதி தொடரும்.

ஹாட் ஸ்பாட் இல்லாத பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக ஊரடங்கு தளர்த்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். ஆனாலும் நாடு முழுக்க பெரும்பான்மை மாநிலங்களில் எப்போதும் போல ஊரடங்கு தொடர்கிறது. நாடு முழுக்க சில மாவட்டங்களில் மட்டும் கொஞ்சமாக ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது .
இன்று பிற மாநிலங்களில் இருக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. பிற மாநிலங்களில் சிக்கி தவிக்கும் இவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்லலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்தது.
இந்த நிலையில் நாடு முழுக்க ஊரடங்கு கட்டுப்பாட்டில் சில மாவட்டங்களில் மே 3ம் தேதிக்கு பிறகு தளர்வு அறிவிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மே 4ம் தேதி இந்த ஊரடங்கு தளர்வு கொண்டு வரப்படும். பெரும்பாலான மாவட்டங்களில் ஊரடங்கில் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
இது தொடர்பான முழுமையான விவரம், புதிய விதிகள் தொடர்பான அறிவிப்பு வரும் நாட்களில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால் பெரும்பாலும் நாடு முழுக்க ஊரடங்கில் குறிப்பிடத்தகுந்த கட்டுப்பாட்டு தளர்வு கொண்டு வரப்படும் என்று கூறுகிறார்கள்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications