சமூக இடைவெளி இல்லை.. மதுவை ஆன்லைனில் டெலிவரி செய்யலாம்.. மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் யோசனை
மதுவை வீட்டிற்கே ஆன்லைன் மூலம் விநியோகம் செய்வது தொடர்பாக மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.
டெல்லி: மதுவை வீட்டிற்கே ஆன்லைன் மூலம் விநியோகம் செய்வது தொடர்பாக மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.
Recommended Video
இந்தியா முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு இருந்தாலும் நாடு முழுக்க பச்சை, ஆரஞ்ச் மண்டலங்களில் மதுவிற்பனை கடைகள், பான் மசாலா கடைகள் இயங்க அனுமதி அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கூட இதனால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.

தமிழ்நாடு நிலை
தமிழகம் முழுக்க நேற்று டாஸ்மாக்கில் குடிமகன்கள் பலர் வயது வித்தியாசமின்றி, முகத்தில் மாஸ்க் கூட அணியாமல் முண்டி அடித்துக்கொண்டு சமூக இடைவெளி விடாமல் நின்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.தற்போது நாடு முழுக்க மதுக்கடை காரணமாக கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநில அரசுகளின் இந்த முடிவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

மதுக்கடை வழக்கு
மதுக்கடைகளை இப்படி திறப்பது மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும். மது குடிக்காத பொது மக்கள் இதனால் அவதிப்படும் நிலை ஏற்படும். அதனால் உச்ச நீதிமன்றம் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் அனின்திதா மித்ரா வழக்கு தொடுத்து இருந்தார். அவரின் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், சஞ்சய் கிஷான் கவுல், பிஆர் கவாய் ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீதிமன்றம் அறிவுரை
இந்த நிலையில் மதுவை வீட்டிற்கே ஆன்லைன் மூலம் விநியோகம் செய்வது தொடர்பாக மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது. உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில், மதுவை வீட்டிற்கே ஆன்லைன் மூலம் விநியோகம் செய்வது தொடர்பாக மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும். நேரடியாக விற்பனை செய்வதை தவிர்க்க முயற்சிக்கலாம்.

ஆன்லைன் அறிவுரை
வரிசையில் நிற்கும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கவும். ஆனால் மது விற்பனை தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை .எங்களுக்கு இதில் உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை. நாங்கள் இது தொடர்பாக அறிவுறுத்தல் மட்டுமே அளித்துள்ளோம், என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
-
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications