கொரோனா பீதி: கைகுலுக்கல், கட்டி அணைத்தல் வேண்டாம்.. வைரஸில் இருந்து தப்பிக்க வணக்கம் போடுங்க!
டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பது குறித்து மக்கள் யோசிக்கத் தொடங்கிவிட்டனர். கைகுலுக்கல், கட்டி அணைத்தலை விட்டு விட்டு இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்ல பிரபலங்களும் தொடங்கிவிட்டனர்.
Recommended Video
சீனாவை பிடித்து உலுக்கி வந்த கொரோனா வைரஸ் கடும் கண்காணிப்புக்கு மத்தியில் எப்படியோ 70 நாடுகளுக்கு பரவி விட்டது. அதாவது மொத்தமுள்ள 7 கண்டங்களில் அன்டார்டிகா கண்டத்தை தவிர ஏனைய கண்டங்களில் பரவி விட்டது.
இது ஒரு உயிர்கொல்லி வைரஸ் என்பதாலும் தடுப்பு மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாத நிலை உள்ளது. இதனால் சாதாரண காய்ச்சல் வந்தாலே கொரோனாவாக இருக்குமோ என்ற பீதி மக்களை தொற்றிக் கொண்டு விட்டது.

வேகம்
கொரோனா வைரஸை எப்படி தடுப்பது என்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. எனினும் சீனாவை விட வேகமாக மற்ற நாடுகளில் 8 மடங்கு பரவி வருகிறது. இது பெரும்பாலும் ஒருவருக்கு ஒருவர் தொட்டுக் கொள்வதால் பரவுவதாக கூறப்படுகிறது. இதனால் பிரபலங்களும் தாங்கள் கைகுலுக்குவதையோ கட்டி அணைப்பதையோ நிறுத்திவிட்டனர்.

மெர்கல்
அதற்கு மிகச் சிறந்த உதாரணம் ஜெர்மன் நாட்டு ஏஞ்சலா மெர்கெல். அண்மையில் ஜெர்மன் நாட்டு அமைச்சர் ஹோர்ஸ்ட் சீஹோஃபரை மெர்கல் சந்தித்தார். அப்போது அவர் சீஹோஃபரிடம் கைகொடுத்தார். ஆனால் கொரோனா பீதியால் சீஹோஃபர் கை கொடுக்காமல் தவிர்த்தார். எனவே இந்த சமயங்களில் நாம் ஒருவரை எப்படி வரவேற்பது என்பதை பார்ப்போம். இது ரொம்ப சிம்பிள்.

கைகுலுக்குதல்
பொதுமக்களாக இருந்தாலும் சரி , செலிபிரிட்டியாக இருந்தாலும் சரி, அரச பிரதிநிதிகளாக இருந்தாலும் சரி இரு கைகளையும் கூப்பி சிரித்து கொண்டே உடலை வளைத்து வணக்கம், நமஸ்தே என கூற வேண்டும். இதுதான் பாரம்பரிய பழக்கமாக இருந்தது. ஆனால் காலம் போக போக மேற்கத்திய பழக்கமான கைகுலுக்குதல், கட்டி அணைத்தலுக்கு சென்றுவிட்டோம். இது போல் செய்வதற்கு 5 காரணங்கள் உண்டு.

சுகாதாரம்
ஒன்றும் யாரையும் தொட்டு பேச வேண்டிய தேவை இருக்காது. இதன் மூலம் கொரோனா பரவுமோ என்ற அச்சமும் இருக்காது. யாராவது கைகுலுக்கும்போதும் கட்டி அணைக்கும் போதும் அதை தவிர்க்க நமஸ்தே சொல்லலாம். இதன் மூலம் எதிராளி நம்மை தவறாக நினைக்க மாட்டார். மூத்தவர்களை வரவேற்க இதுவே சிறந்த வழி. கட்டி அணைத்தலையும் முத்தமிடுதலையும் தவிர்த்து விடலாம். கடைசியாக சுகாதாரமான முறையில் ஒருவரை வரவேற்க கை கூப்பி சிரித்துக் கொண்டே உடலை வளைத்து வணக்கம் சொல்வதே சிறந்தது. என்ன இதுபோல் செய்வீர்களா?












Click it and Unblock the Notifications