கொரோனா பாதிப்பு: ஹாட்ஸ்பாட் பகுதிகளில் லாக்டவுன் நீட்டிப்பு? முதல்வர்களிடம் மோடி சூசகம்
டெல்லி: கொரோனா பாதித்த ஹாட்ஸ்பாட் பகுதிகளில் லாக்டவுன் நீட்டிக்கப்படலாம் என்று முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி சுட்டிக்காட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
கொரோனாவை கட்டுப்படுத்த 40 நாட்கள் லாக்டவுன் அமலில் உள்ளது. இந்த லாக்டவுன் மே 3-ந் தேதி நிறைவடைகிறது. லாக்டவுனை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று தெலுங்கானா, ஒடிஷா உள்ளிட்ட பல மாநில அரசுகள் வலியுறுத்தின.

இந்நிலையில் இன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது லாக்டவுன் தொடர்பாக மாநில முதல்வர்கள் கருத்துகளை முன்வத்தனர்.
லாக்டவுனை நீட்டிப்பதற்கு பல மாநில முதல்வர்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். சில மாநில முதல்வர்கள், பொருளாதார நடவடிக்கையை மீள தொடங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, மாநில முதல்வர்களிடம் ஹாட்ஸ்பாட் எனப்படும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் லாக்டவுனை நீட்டிக்கலாம் என பிரதமர் மோடி சுட்டிக்காட்டியதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் நாட்டின் பொருளாதாரத்தை நல்ல நிலைமைக்கு கொண்டுவர முடியும் என்றும் அதைப்பற்றி முதல்வர்கள் அச்சமும் கவலையும்பட தேவையும் இல்லை என்றும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார். லாக்டவுன் நீட்டிப்பது தொடர்பாக மே 3-ந் தேதி முடிவு அறிவிகப்படும் எனவும் மோடி தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications