Omicron Coronavirus: இந்தியா இனி எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.. எய்ம்ஸ் இயக்குனர் எச்சரிக்கை
டெல்லி: இந்தியா எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று ஓமிக்ரான் பரவல் பற்றி எய்ம்ஸ் இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஓமிக்ரான் வேகமாக பரவுவதாக எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தனது எச்சரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் புதிதாக 6 ஓமிக்ரான் கேஸ்கள் பதிவாகி உள்ளன. இதன் மூலம் மகாராஷ்டிராவில் மட்டும் இந்தியாவில் 54 ஓமிக்ரான் கேஸ்கள் உள்ளது.
இந்தியாவில் இதுவரை 34,740,275 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் லேசாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் புதிதாக 7,081 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மரணம்
இந்தியாவில் இதுவரை 477,422 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 264 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 34,171,471 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 91,382 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்கள் 151 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓமிக்ரான்
11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் ஓமிக்ரான் இந்தியாவில் பதிவாகி உள்ளது. மகாராஷ்டிரா (54), டெல்லி (22), ராஜஸ்தான் (17), கர்நாடகா (14), தெலுங்கானா (20), குஜராத் (9), கேரளா (11), ஆந்திர பிரதேசம் (1), சண்டிகர் (1), தமிழ்நாடு (1) மற்றும் மேற்கு வங்கம் (1) ஆகிய மாநிலங்களில் இதுவரை கேஸ்கள் பதிவாகி உள்ளது.

எச்சரிக்கை
இந்த நிலையில், இந்தியா எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று ஓமிக்ரான் பரவல் பற்றி எய்ம்ஸ் இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஓமிக்ரான் வேகமாக பரவுவதாக எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தனது எச்சரிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதில், நாம் இப்போதே மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

யு.கே மோசம்
யு.கேவில் நிலைமை மோசமானது போல இந்தியாவிலும் ஆகிவிட கூடாது. ஓமிக்ரான் குறித்த கூடுதல் டேட்டாக்கள் தேவை. நாட்டில் எந்த மூலையில் கொரோனா கேஸ்கள் அதிகரித்தாலும் அங்கு உடனடியாக சோதனை மேற்கொள்ள வேண்டும்.
Recommended Video

ஓமிக்ரான்
அங்கு ஓமிக்ரான் பரவுகிறதா என்று சோதிக்க வேண்டும். திடீரென கொரோனா கேஸ்கள் அதிகரிப்பதற்கு பின் ஓமிக்ரான் பரவல் காரணமாக இருக்கலாம். எந்த விஷயத்திற்கும் தயாராக இருப்பதே நல்லது. எதையும் தயார் செய்யாமல் சிக்கலில் மாட்டுவதை விட முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுப்பதே சிறந்தது என்று எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தனது எச்சரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications