கொரோனா: சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உட்பட நாடு முழுவதும் 75 மாவட்டங்களுக்கு சீல்!
டெல்லி: கொரோனா பாதிப்பு உள்ள தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு உட்பட நாட்டின் 75 மாவட்டங்களை சீல் வைக்க மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இம்மாவட்டங்களில் வரும் 31-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்
கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. கொரோனா அடுத்த கட்டமாக தாக்குவதற்கு முன்னதாக பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்ப்பதில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக உள்ளன.

இன்று காலை 7 மணி முதல் மக்கள் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு பின்பற்றப்படுகின்றன. தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நாளை காலை வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மாநில செயலாளர்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்தியது. பிரதமர் மோடியின் முதன்மை செயலாளர், கேபினட் செயலாளர் ஆகியோர் மாநில தலைமை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையில் பிரதமர் மோடி அழைப்பு விடுத்த சுய ஊரடங்குக்கான மக்களின் ஆதரவு குறித்து மாநில செயலாளர்கள் விவரித்தனர். கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்காக மாநிலங்களிடையேயான போக்குவரத்து ரத்து உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை நீட்டிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்ட 75 மாவட்டங்களுக்கு சீல் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதில் தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்களும் அடங்கும். இம்மாவட்டங்களில் வரும் 31-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.
இந்த மாவட்டங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மட்டும் அனுமதிக்கப்படும். எல்லைகள் சீல் வைக்கப்படும். மேலும் நாடு முழுவதும் சரக்கு ரயில் தவிர்த்த பிற ரயில் சேவைகளை மார்ச் 31வரை ரத்து செய்வது எனவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அத்தியாவசியப் பொருட்கள் தவிர்த்த மாநிலங்களிடையேயான பொது போக்குவரத்தை வரும் 31-ந் தேதி வரை ரத்து செய்வது எனவும் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
-
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
சார் உங்களுக்கு ஒரு சல்யூட்! நள்ளிரவில் ரயில் நிலையத்தில் தவித்த பெண்! யோசிக்காமல் உதவிய ராணுவ வீரர் -
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. நாடாளுமன்றத்தில் கொந்தளித்த எதிர்க்கட்சி எம்பிக்கள்! -
பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன் -
படிச்சு படிச்சு சொன்னோமே சண்டை வேணாம்னு! இப்போ பொணத்தைக் கூட எரிக்க முடியல! இப்படி ஒரு சிக்கலா? -
மொத்த இந்தியாவும் முடங்கப்போகுது.. தீவிரமாகும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. மோடியை சந்தித்த பூரி - ஜெய்சங்கர் -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications