கொரோனா: சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உட்பட நாடு முழுவதும் 75 மாவட்டங்களுக்கு சீல்!
டெல்லி: கொரோனா பாதிப்பு உள்ள தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு உட்பட நாட்டின் 75 மாவட்டங்களை சீல் வைக்க மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இம்மாவட்டங்களில் வரும் 31-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்
கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. கொரோனா அடுத்த கட்டமாக தாக்குவதற்கு முன்னதாக பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்ப்பதில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக உள்ளன.

இன்று காலை 7 மணி முதல் மக்கள் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு பின்பற்றப்படுகின்றன. தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நாளை காலை வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மாநில செயலாளர்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்தியது. பிரதமர் மோடியின் முதன்மை செயலாளர், கேபினட் செயலாளர் ஆகியோர் மாநில தலைமை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையில் பிரதமர் மோடி அழைப்பு விடுத்த சுய ஊரடங்குக்கான மக்களின் ஆதரவு குறித்து மாநில செயலாளர்கள் விவரித்தனர். கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்காக மாநிலங்களிடையேயான போக்குவரத்து ரத்து உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை நீட்டிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்ட 75 மாவட்டங்களுக்கு சீல் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதில் தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்களும் அடங்கும். இம்மாவட்டங்களில் வரும் 31-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.
இந்த மாவட்டங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மட்டும் அனுமதிக்கப்படும். எல்லைகள் சீல் வைக்கப்படும். மேலும் நாடு முழுவதும் சரக்கு ரயில் தவிர்த்த பிற ரயில் சேவைகளை மார்ச் 31வரை ரத்து செய்வது எனவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அத்தியாவசியப் பொருட்கள் தவிர்த்த மாநிலங்களிடையேயான பொது போக்குவரத்தை வரும் 31-ந் தேதி வரை ரத்து செய்வது எனவும் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications