இதுவரை இல்லாத உச்சம்.. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 67 ஆயிரம் கொரோனா கேஸ்கள்.. மோசமான நிலை
டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் 67066 பேர் இந்தியாவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. 6 முறை லாக்டவுன் போடப்பட்ட பின்பும் கூட கொரோனா கேஸ்கள் வேகமாக அதிகரித்து வருகிறது.
இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் அதிக அளவில் இந்தியாவில் கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 2395471 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா தினசரி கேஸ்கள்
இந்தியாவில் மொத்தமாக 1695850 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 57759 பேர் இந்தியாவில் குணமடைந்து உள்ளனர். கொரோனா காரணமாக இதுவரை 47138 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

பலி எண்ணிக்கை
தினசரி பலி எண்ணிக்கை ஒரு பக்கம் வேகமாக உயர்ந்து வருகிறது. 950 பேர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிராவில் மொத்தமாக 548398 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 18650 பேர் இதுவரை அங்கு பலியாகி உள்ளனர்.

தமிழகம்
தமிழகத்தில் 314520 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 5278 பேர் இதுவரை அங்கு பலியாகி உள்ளனர். ஆந்திர பிரதேசத்தில் 254146 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 2296 பேர் இதுவரை அங்கு பலியாகி உள்ளனர்.

டெல்லி
கர்நாடகாவில் 196494 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 3511 பேர் இதுவரை அங்கு பலியாகி உள்ளனர். டெல்லியில் கொரோனா கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளது. டெல்லியில் 148504 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 4153 பேர் இதுவரை அங்கு பலியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications