டிசம்பருக்குள் கொரோனா தடுப்பு மருந்து தயாராகிவிடும்- 2 மாதங்களில் விலை நிர்ணயம்: சீரம் இன்ஸ்டிடியூட்
டெல்லி: கொரோனா தடுப்பு மருந்தானது டிசம்பருக்குள் தயாராகிவிடும் என்றும் 2 மாதங்களில் இந்த தடுப்பூசிக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுவிடும் என்றும் சீரம் இன்ஸ்டிடியூட் (Serum Institute of India) தலைமை செயல் அதிகாரி அதர் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
புனேவை தலைமையிடமாகக் கொண்ட சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, கொரோனா தடுப்பு மருந்தில் தீவிரம் காட்டி வருகிறது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துடன் AstraZeneca நிறுவனம் கொரோனா மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இதில் சீரம் இன்ஸ்டிடியூட்டும் இணைந்துள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது தொடர்பாக சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை செயல் அதிகாரி அதர் பூனாவாலா கூறியதாவது:
நடப்பான்டின் இறுதிக்குள் கொரோனா தடுப்பு மருந்து நடைமுறைக்கு வந்துவிடும். சில ஆயிரம் நோயாளிகளுக்கு இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து இந்த பரிசோதனைகளை நடத்தி இருக்கிறோம். இந்த தடுப்பு மருந்தின் விலை தொடர்பாக இன்னும் 2 மாதத்தில் இறுதி முடிவு அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதர் பூனாவாலா கூறினார். முன்னதாக, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 4,000 முதல் 5,000 நோயாளிகளுக்கு புனே மற்றும் மும்பையில் கொரோனா தடுப்பு மருந்து சோதனை நடத்தப்படும். ஆண்டு இறுதிக்குள் 300 மில்லியன் முதல் 400 மில்லியன் டோஸ் மருந்துகள் தயாரிக்கப்படுவதே தங்களது நிறுவனத்தின் இலக்கு என கூறியிருந்தார்.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications