என்ன ஆனார் கைலாசா "பிரதமர்" நித்தியானந்தா.. கொரோனாவில் சிக்கினாரா?.. நோ சவுண்டு.. நோ வீடியோ!
டெல்லி: கொரோனா குறித்து எகத்தாளமாக பேசிவந்த சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா குறித்து 2 வார காலமாக செய்திகள் எதுவும் வராதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
Recommended Video
இந்தியாவில் பலாத்கார வழக்கில் சிக்கி தப்பி ஓடியவர் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா. பசிபிக் கடற்பரப்பில் ஏதோ ஒரு குட்டி தீவை விலைக்கு வாங்கியுள்ளார் நித்தியானந்தா.
உலகமே வியக்கிறது... கொரோனா வைரஸால் பாதிக்கப்படாத தேசங்களும் இருக்கிறதே!
கைலாசா பிரதமர்
அந்த தீவையே கைலாசா என்கிற இந்து நாடு எனவும் அவர் பிரகடனம் செய்திருக்கிறார். அந்த நாட்டுக்கும் நித்தியானந்தாதான் பிரதமர். நித்தியானந்தா தலைமறைவு குற்றவாளி என்பதால் அவர் தேடப்பட்டு வருகிறார். இண்டர்போல் போலீஸும் நித்திக்கு வலைவீசி இருக்கிறது.
நித்தி வீடியோக்கள்
அதேநேரத்தில் முதலில் கைலாசா குறித்து மவுனமாக இருந்து வந்தார் நித்தியானந்தா. பின்னர் கைலாசாவை முன்வைத்தும் தமிழக அரசியலை மையமாக வைத்தும் இடைவிடாத வீடியோக்களை போட்டு வந்தார் நித்தி. அத்துடன் அவரது சீடர்களும் இடைவிடாமல் வீடியோக்கள் மூலம் அலப்பறையை வெளிப்படுத்தி வந்தனர்.
கொரோனா குறித்து நித்தி
கொரோனாவே தாக்காத தேசம் எங்களுடைய கைலாசா என கிண்டலடித்து பேசி வந்தார் நித்தியானந்தா. இதற்கும் அசரவைக்கும் ஆன்மீக விளக்கங்களையும் கொடுத்து வந்தார் நித்தியானந்தா. ஆனால் கடந்த 2 வாரங்களாக நித்தியானந்தா குறித்து எந்த ஒரு செய்தியும் வரவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்தான் கொரோனாவால் கொடூரமாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.
நித்தி எங்கே போனார்?
நித்தியானந்தாவின் கைலாசாவும் அந்த பிராந்தியத்தில்தான் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நித்தியானந்தாவின் கைலாசாவும் கொரோனாவின் பிடியில் சிக்கியிருக்கிறதா? அதில் இருந்து நித்தியானந்தா தப்பினாரா? என்ன ஆனார்? என்பது அவரை மீம்ஸ் நாயகனாக கொண்டாடும் நெட்டிசன்களின் பெரும் கவலை.