"ஒளிந்திருக்கும்" கேஸ்கள்.. ஜூன், ஜூலையில் இந்தியாவில் கொரோனா உச்சம் அடையும்.. எய்ம்ஸ் எச்சரிக்கை!
இந்தியாவில் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கொரோனா கேஸ்கள் உச்சம் அடையும் என்று எய்ம்ஸ் இயக்குனர் மருத்துவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்தியாவில் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கொரோனா கேஸ்கள் உச்சம் அடையும் என்று எய்ம்ஸ் இயக்குனர் மருத்துவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் 56351 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா காரணமாக 1889 பேர் பலியாகி உள்ளனர்.
16776 பேர் மொத்தமாக நாடு முழுக்க குணமாகி உள்ளனர்.சரியாக 10 நாட்களில் இந்தியாவில் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகியுள்ளது.

உச்சம் அடையும்
இந்த நிலையில், இந்தியாவில் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கொரோனா கேஸ்கள் உச்சம் அடையும் என்று எய்ம்ஸ் இயக்குனர் மருத்துவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். அவர் தனது பேட்டியில், இந்தியாவில் ஜூலை மாதத்தில் கேஸ்கள் தீவிரம் அடைய வாய்ப்புள்ளது. மே மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைய மாற்றங்கள் நடக்கும். தற்போது கேஸ்கள் உயரும் வீதம் கவலை அளிக்கிறது.
Recommended Video

கவலை அளிக்கிறது
இந்த புள்ளி விவரம் கவலை தருகிறது. இதில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனாலும் நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும். தற்போது மொத்தம் 4.8% நோயாளிகள் ஐசியூவில் இருக்கிறார்கள். இதில் 1.1% வெண்டிலேட்டர் உதவியுடன் இருக்கிறார்கள். அதேபோல் 3.3% பேருக்கு ஆக்ஜிசன் தேவைப்படுகிறது. நாம் தினமும் 95000 கொரோனா கேஸ்களை டெஸ்ட் செய்கிறோம். மொத்தம் 327 அரசு சோதனை மையங்கள் உள்ளது.

டெஸ்ட்
188 தனியார் கொரோனா சோதனை மையங்கள் உள்ளது. 13,57,442 கொரோனா சோதனைகள் இதுவரை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக அந்தமான் நிக்கோபார், அருணாச்சலப்பிரதேசம், சட்டீஸ்கர், கோவா, ஜார்கண்ட், இமாச்சலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர் , கேரளா, மணிப்பூர், மேகாலயா, ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் கேஸ்கள் எதுவும் பதிவாகவில்லை.

தீவிரமான பணிகள்
காண்டாக்ட் டிரேசிங் முறையில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் மிக முக்கியமாக கட்டுப்பாட்டு முறைகளில் நாம் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும், எங்காவது கொரோனா கேஸ்கள் ஒளிந்திருக்கும். யாராவது தனக்கு தெரியாமலே கொரோனாவை சுமந்து இருக்க வாய்ப்புள்ளது. இதனால் கொரோனா சோதனைகளை நாடு முழுக்க விரிவுபடுத்த வேண்டும், என்று அவர் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications