12 மணி நேரத்தில் சாகும் கொரோனா.. மோடியின் மக்கள் ஊரடங்கு.. வாட்ஸ் ஆப்பில் உலாவும் செய்தி உண்மையா?
பிரதமர் மோடி கொரோனாவிற்கு எதிராக மக்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்று மக்கள் ஊரடங்கு திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறார்.
டெல்லி: பிரதமர் மோடியின் மக்கள் ஊரடங்கு திட்டத்தால் கொரோனா வைரஸ் எல்லாம் சாகும் என்று வாட்ஸ் ஆப்பில் தகவல் ஒன்று பரவி வருகிறது.
Recommended Video
பிரதமர் மோடி கொரோனாவிற்கு எதிராக மக்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்று மக்கள் ஊரடங்கு திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறார். இதற்காக ஞாயிற்றுக்கிழமை (நாளை) ஒருநாளை மோடி தேர்வு செய்துள்ளார்.
கொரோனாவிற்கு எதிராக மார்ச் 22-ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை சுய ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும், என்று மோடி கூறியுள்ளார். பிரதமர் மோடியின் இந்த ஐடியாவை பலரும் வரவேற்று இருக்கிறார்கள். இது வைரஸை ஓரளவு கட்டுப்படுத்த உதவும் என்று பலரும் கூறுகிறார்கள்.

என்ன காரணம்
இந்த நிலையில் இதற்கான காரணம் என்ன என்று வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நிறைய செய்திகள் பரவி வருகிறது. அந்த செய்தியில், கொரோனா வைரஸின் ஆயுட்காலம் 12 மணி நேரம்தான். அது பொருட்களின் மீதும், தளங்களின் மீதும் 12 மணி நேரம்தான் இருக்க முடியும். மக்கள் ஊரடங்கு உத்தரவு 14 மணி நேரம் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வைரஸை கட்டுப்படுத்த முடியும்.

மக்கள் உள்ளே இருப்பார்கள்
14 மணி நேரம் மக்கள் உள்ளேயே இருப்பார்கள் என்பதால், பொது இடங்களில் இருக்கும் கொரோனா வைரஸ் 12 மணி நேரத்தில் இறந்து விடும். இதனால் கொரோனா வைரஸால் பரவ முடியாது. அதன் தொடர்பு இழக்கப்படும். 14 மணி நேரத்திற்கு பின் இந்தியா மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இந்த நேரத்தை அதிகரித்து எதிர்காலத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று வாட்ஸ் ஆப்பில் செய்தி உலவி வருகிறது.

என்ன செய்தி
வாட்ஸ் ஆப்பில் வலம் வரும் இந்த செய்தியை தமிழக பாஜகவை சேர்ந்தவர்கள் உட்பட பலர் ஷேர் செய்து வருகிறார்கள். வாட்ஸ் ஆப்பில் வலம் வரும் இந்த செய்தி முழுக்க முழுக்க பொய்யானது. ஏனென்றால் கொரோனா வைரஸ் ஸ்டீல் கம்பிகளில் (பேருந்து, ரயில், மெட்ரோ கம்பிகள் ஸ்டெயில்களால் ஆனது) 3 நாட்கள் வரை வாழும். அதேபோல் பிளாஸ்டிக் பொருட்களில் 4 நாட்கள் வரை வாழும்.

உண்மை என்ன
குளிரான இடங்களில், சேர்களில் 2 நாள்கள் வரை வாழும். வெப்பம் குறைந்த இடங்களில் இதன் வாழ்நாள் இதைவிட அதிகமாக இருக்கும். கண்டிப்பாக இந்த வைரஸ் 12 மணி நேரத்தில் சாகாது. இந்த வைரஸ் மிகவும் வலிமையானது. அத்தனை எளிதாக இது செத்துவிடாது. இது இளைஞர்களை தாக்காது என்று கருதப்பட்ட நிலையில் தற்போது இளைஞர்களையும் தாக்க தொடங்கி உள்ளது.

மிக அதிக வலிமை
அப்படி இருக்க 12 மணி நேரத்தில் இந்த வைரஸ் சாகும் என்பது முழுக்க முழுக்க பொய்யான செய்தி ஆகும். இதை பலரும் நம்பி பரப்பி வருகிறார்கள். அதிலும் பாஜகவை சேர்ந்த காயத்திரி ரகுராம் உள்ளிட்டோர் கூட இதை கண் மூடித்தனமாக ஷேர் செய்து வருகிறார்கள்.இதனால் மக்கள் இடையே தவறான செய்திகள் பரவும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications