நாளை இரண்டாம் கட்ட தேர்தல்... கேஸ் சிலிண்டர் விலையும் குறைப்பு.. காரணம் என்ன தெரியுமா?
டெல்லி: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் கேஸ் சிலிண்டர் விலை இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாய் குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. நாட்டின் சில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ கடந்தது. அதேபோல கேஸ் சிலிண்சர் விலையும் சில மாதங்களில் 125 ரூபாய் வரை உயர்ந்தது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்பட்டது. கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட இந்தாண்டு அந்நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துள்ளன. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து.
இந்நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. சர்வதேச சந்தையிலும் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
இதையடுத்து வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களின் விலை 10 ரூபாய் குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை குறைப்பு இன்று இரவு முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல அடுத்த வாரம் தமிழ்நாடு, கேரளா என 5 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தச் சூழ்நிலையில் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications