நாளை இரண்டாம் கட்ட தேர்தல்... கேஸ் சிலிண்டர் விலையும் குறைப்பு.. காரணம் என்ன தெரியுமா?
டெல்லி: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் கேஸ் சிலிண்டர் விலை இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாய் குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. நாட்டின் சில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ கடந்தது. அதேபோல கேஸ் சிலிண்சர் விலையும் சில மாதங்களில் 125 ரூபாய் வரை உயர்ந்தது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்பட்டது. கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட இந்தாண்டு அந்நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துள்ளன. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து.
இந்நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. சர்வதேச சந்தையிலும் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
இதையடுத்து வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களின் விலை 10 ரூபாய் குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை குறைப்பு இன்று இரவு முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல அடுத்த வாரம் தமிழ்நாடு, கேரளா என 5 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தச் சூழ்நிலையில் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications