கொரோனா தடுப்பூசி செலுத்திய 22 பேர் மரணம்... அதற்கு காரணம் வேறு - மத்திய சுகாதார அமைச்சகம்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பு 22 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும், ஆனால் தடுப்பூசிக்கும் மரணத்திற்கும் தொடர்பு இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
டெல்லி : இந்தியாவில் கோவிட்-19 க்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 22 பேர் இதுவரை இறந்துள்ளனர், ஆனால் எந்தவொரு இறப்பும் தடுப்பூசியுடன் தொடர்புபடுத்தப்படவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 52,90,474 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சீரம் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் இந்தியாவில் செலுத்தப்படுகின்றன.

முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், அடுத்தகட்டமாக அரசு பிரநிதிகள் உள்ளிட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டு, அதன்படி கடந்த சில வாரங்களாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலர் மரணமடைந்துள்ளனர். இதுவரை எத்தனை பேர் மரணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கோவிட்-19 க்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 22 பேர் இதுவரை இறந்துள்ளனர், ஆனால் எந்தவொரு இறப்பும் தடுப்பூசியுடன் தொடர்புபடுத்தப்படவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்தது. இதுவரை மரணமடைந்த 22 பேரில், கடந்த 24 மணி நேரத்தில் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாகவும் மத்திய கூடுதல் சுகாதார செயலாளர் மனோகர் அக்னானி தெரிவித்தார். இந்தியாவில் இதுவரை மொத்தம் 52,90,474 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 77 வயதான ஒருவர் தடுப்பூசி உயிரிழந்தார். அவருக்கு நீரிழிவு நோயுடன் கூடிய இதய பாதிப்பு காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளது. தடுப்பூசிகளால் ஏற்படும் மரணம் குறித்து ஆய்வு செய்ய மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேசியக் குழு, கூறியது போல, இதுபோன்ற இறப்புகளை எதிர்வரும் நாட்களில் ஆய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பூசி போடப்படும் இலக்கில் 50 சதவிகிதம் எட்டப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் தடுப்பூசி போடப்படும் இலக்கு விரைவில் எட்டப்பட்டு விடும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications