கொரோனாவை தடுப்பதில்.. மத்திய அரசு சரியாக செயல்படவில்லை.. 45% பேர் கருத்து.. ஆய்வில் தகவல்!
டெல்லி: கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லை என்று 45% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் முதல் அலையை விட, இரண்டாவது அலை கடும் பேரழிவை ஏற்படுத்தி இருக்கிறது.
உயிரிழப்பும், பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பீதி மற்றும் கடும் விரக்தியில் ஆழ்ந்துள்ளனர்.

மக்கள் மனநிலை என்ன?
இந்த நிலையில் கடும் எழுச்சி பெற்ற கொரோனா அலைக்கு மத்தியில் இந்தியர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள்? கொரோனா விவகாரத்தில் அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் நினைப்பது என்ன? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. சமூக ஊடக தளமான லோக்கல் சர்க்கிள்ஸின் நடத்திய ஆய்வு முடிவுகள் பின்வரும் தகவல்களை கூறியுள்ளன.

20% பேர் கோபம்
மொத்த பதிலளித்தவர்களில் 45 சதவீதம் பேர் வைரஸின் இரண்டாவது அலையை இந்திய அரசு சரியான பாதையில் சமாளிக்கவில்லை என்று கூறியுள்ளனர். பெறப்பட்ட 8,141 பதில்களில், 23 சதவீதம் பேர் கொரோனாவால் கவலை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 20 சதவீதம் பேர் தாங்கள் வருத்தமாகவும் கோபமாகவும் இருப்பதாகவும், 10 சதவீதம் பேர் மிகவும் கோபமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

28% பேர் நம்பிக்கை
8 சதவீதம் பேர் தாங்கள் மனச்சோர்வடைந்த நிலையில் உள்ளதாகவும், 7 சதவீதம் தாங்கள் அமைதியாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். 28 சதவீதம் பேர் தாங்கள் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சி வல்லுநர்கள் நாடு முழுவதும் வைரஸை திறம்பட கையாளுகிறார்களா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு 51 சதவீதம் பேர் பதில் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.

அரசு மீது குற்றச்சாட்டு
தொற்றுநோயின் இரண்டாவது அலைகளை அரசு திறமையாக கையாளுகிறதா? என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மொத்தம் 8,367 பேரில், 45 சதவீதம் பேர் அரசு சரியான பாதையில் செல்லவில்லை என்று கூறியுள்ளனர். 41 சதவீதம் பேர் அரசு சரியான பாதையில் செல்வதாகவும் 14 சதவீதம் பேர் உறுதியாக தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.

ஊரடங்குக்கு ஆதரவு
தவறான முன்னுரிமைகள், உறுதியற்ற தன்மை மற்றும் ஆயத்தமின்மை ஆகியவை இந்தியா சரியான பாதையில் இல்லை என்று நம்புவதற்கு முக்கிய காரணங்கள் என்று அரசின் மீது அதிருப்தி கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மாவட்ட அளவிலான ஊரடங்குக்கு மக்கள் ஆதரவு தெரிவிப்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டின் 324 மாவட்டங்களில் இருந்து 25,000 க்கும் மேற்பட்டவர்களிடம் லோக்கல் சர்க்கிள்ஸின் ஆய்வு நடத்தியது. இவர்களில் 65 சதவீதம் ஆண்கள். 35 சதவீதம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்யாத மேனேஜர்களுக்கு கோடிகளில் போனஸ்.. 173 கோடி சம்பளம் வாங்கும் சிஇஓ -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
அபிஷேக் சர்மா அவுட்.. ரிங்கு சிங் இன்.. அரையிறுதியில் மொத்தமாக மாறப்போகும் இந்திய பிளேயிங் லெவன்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
இத்தோடு விஜய் அரசியல் முடியனும்.. திமுக தீவிரம்.. காங்கிரசிடம் இறங்கிப் போய் கூட்டணி வைத்த ரகசியம்












Click it and Unblock the Notifications