இதுதான் ஒரே வழி.. மோடி மீட்டிங்கில் 8 மாநிலங்களுக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. 3 முக்கியமான டாஸ்க்!
டெல்லி: கொரோனா பாதிப்பு, வேக்சின் உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பாக பிரதமர் மோடி இன்று மாநில முதல்வர்கள் உடன் ஆலோசனை செய்தார். இதில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநில முதல்வர்களுக்கு முக்கியமான 3 டாஸ்குகளை கொடுத்தார்.
உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வேக்சினுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலை, நோவாவேக்சின், சினோவேக்ஸ், ஃபைசர், மாடர்னா, பாரத் பயோ டெக் உள்ளிட்ட பல நிறுவனங்கள் உலகம் முழுக்க ஆராய்ச்சிகளை செய்து வருகிறது
இதில் பைசர், மாடர்னா, ஆக்ஸ்போர்ட் பல்கலை வேக்சின்கள் அதிக நம்பிக்கை அளித்து வருகிறது. ஃபைசர், மாடர்னா நிறுவனங்கள் சோதனை முடிந்துள்ள நிலையில் விரைவில் இதற்கு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலோசனை
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்தார். கொரோனா பரவல், இரண்டாம் அலை அச்சம், கொரோனா வேக்சின் தயாரிப்பு, விநியோகம் என்று பல விஷயங்கள் குறித்து இதில் ஆலோசனை செய்தார். 8 மாநில முதல்வர்கள் இந்த மீட்டிங்கில் கலந்து கொண்டனர்.டெல்லி, மஹாராஷ்டிரா, கேரளா, மேற்கு வங்கம், கர்நாடகா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

குறிக்கோள்
இதில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா 8 மாநில முதல்வர்களுக்கு முக்கியமான 3 டாஸ்குகளை கொடுத்தார். அதன்படி டாஸ்க் 1. மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் இருக்கும் ரெட் சோன், கன்டெயின்மென்ட் சோன் பகுதிகளை எல்லா வாரமும் சோதனை செய்ய வேண்டும். அங்கு இருக்கும் கேஸ் நிலவரம், புதிய கேஸ் நிலவரங்களை வைத்து அந்த பகுதிகளின் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும். அந்த பகுதி ரெட் சோனாக நீடிக்குமா என்று உறுதி செய்ய வேண்டும்.

முக்கிய வேண்டுகோள்
டாஸ்க் 2. அதேபோல் கொரோனா இறப்பு சதவிகிதம் 1% ஆக குறைக்கப்பட வேண்டும். இதற்கான அனைத்து பணிகளையும் இந்த 8 மாநிலங்கள் செய்ய வேண்டும். டாஸ்க் 3. புதிய கொரோனா கேஸ்களில் சதவிகிதம் 5%க்கும் கீழ் குறைக்கப்பட வேண்டும் என்று அமித் ஷா இந்த 8 மாநிலங்களுக்கு டாஸ்க் கொடுத்துள்ளார். இரண்டாம் அலையை தடுக்கும் விதமாக அமித் ஷா இந்த திட்டங்களை வகுத்துள்ளார்.

ஆலோசனை செய்தார்
கொரோனா வேக்சின் உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பாக பிரதமர் மோடி இரண்டு நாடுகளுக்கு முன் வல்லுனர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். நிதி ஆயோக், மருத்துவ குழு, வேக்சின் ஆராய்ச்சி குழு என்று பல்வேறு குழுவுடன் மோடி ஆலோசனை செய்தார். இதை தொடர்ந்து இன்று முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்து உள்ளார். இந்தியாவில் வேக்சின் வந்த பின் யாருக்கும் முதலில் கொடுக்கலாம் என்பது குறித்த ஆலோசனைகளை பிரதமர் மோடி இதில் செய்தது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications