இந்தியாவின் முதல் கொரோனா வேக்சின்.. கோவேக்சின் எவ்வளவு தடுப்பாற்றல் கொண்டது?பாரத் பயோடெக் குட்நியூஸ்
டெல்லி: இந்தியாவில் உருவாக்கப்பட்டு இருக்கும் முதல் கொரோனா வேக்சினான கோவேக்சின் மருந்து 60% தடுப்பாற்றலை கொண்டு இருக்கும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாவிற்கு எதிராக தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. கோவேக்சின் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இந்த மருந்தின் மூன்றாம் கட்ட மனித சோதனைகள் தற்போது நடந்து வருகிறது.
இதுவரை இரண்டு கட்ட மனித சோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

மூன்றாம் கட்டம்
இந்த மூன்றாம் கட்ட மனித சோதனையில் 26000 தன்னார்வலர்கள் பங்கு பெற்றுள்ளனர். மொத்தம் நாடு முழுக்க 25 நகரங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மிகப்பெரியது
இந்தியாவில் செய்யப்படும் மிகப்பெரிய கொரோனா வேக்சின் சோதனை ஆகும் இது. இந்த நிலையில் கோவேக்சின் மருந்து 60% தடுப்பாற்றலை கொண்டு இருக்கும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள அந்த நிறுவனம், பொதுவாக ஒரு மருந்துக்கு 50%க்கும் அதிகமான நோய் தடுப்பாற்றல் இருந்தால் அதை உலக சுகாதார மையம் அனுமதிக்கும்.

அனுமதி
வேக்சின் அனுமதியில் இந்த நடைமுறைதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் கோவேக்சின் மருந்துக்கும் விரைவில் அனுமதி கிடைக்கும். கோவேக்சின் மருந்து 60% தடுப்பாற்றலை கொண்டு இருக்கும். தற்போது நடக்கும் சோதனைகளின் படி கோவேக்சின் மருந்தின் தடுப்பாற்றல் இதை விட அதிகம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் காலாண்டு
தற்போது துரிதமாக சோதனைகள் நடந்து வருகிறது. அதேபோல் கவனமாக சோதனைகளை செய்து வருகிறோம். 2021ன் இரண்டாம் காலாண்டிற்குள் மொத்தமாக இந்த மருந்துக்கு அனுமதி வாங்க முடியும் என நம்புகிறோம் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications