இந்தியாவின் முதல் கொரோனா வேக்சின்.. கோவேக்சின் எவ்வளவு தடுப்பாற்றல் கொண்டது?பாரத் பயோடெக் குட்நியூஸ்
டெல்லி: இந்தியாவில் உருவாக்கப்பட்டு இருக்கும் முதல் கொரோனா வேக்சினான கோவேக்சின் மருந்து 60% தடுப்பாற்றலை கொண்டு இருக்கும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாவிற்கு எதிராக தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. கோவேக்சின் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இந்த மருந்தின் மூன்றாம் கட்ட மனித சோதனைகள் தற்போது நடந்து வருகிறது.
இதுவரை இரண்டு கட்ட மனித சோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

மூன்றாம் கட்டம்
இந்த மூன்றாம் கட்ட மனித சோதனையில் 26000 தன்னார்வலர்கள் பங்கு பெற்றுள்ளனர். மொத்தம் நாடு முழுக்க 25 நகரங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மிகப்பெரியது
இந்தியாவில் செய்யப்படும் மிகப்பெரிய கொரோனா வேக்சின் சோதனை ஆகும் இது. இந்த நிலையில் கோவேக்சின் மருந்து 60% தடுப்பாற்றலை கொண்டு இருக்கும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள அந்த நிறுவனம், பொதுவாக ஒரு மருந்துக்கு 50%க்கும் அதிகமான நோய் தடுப்பாற்றல் இருந்தால் அதை உலக சுகாதார மையம் அனுமதிக்கும்.

அனுமதி
வேக்சின் அனுமதியில் இந்த நடைமுறைதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் கோவேக்சின் மருந்துக்கும் விரைவில் அனுமதி கிடைக்கும். கோவேக்சின் மருந்து 60% தடுப்பாற்றலை கொண்டு இருக்கும். தற்போது நடக்கும் சோதனைகளின் படி கோவேக்சின் மருந்தின் தடுப்பாற்றல் இதை விட அதிகம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் காலாண்டு
தற்போது துரிதமாக சோதனைகள் நடந்து வருகிறது. அதேபோல் கவனமாக சோதனைகளை செய்து வருகிறோம். 2021ன் இரண்டாம் காலாண்டிற்குள் மொத்தமாக இந்த மருந்துக்கு அனுமதி வாங்க முடியும் என நம்புகிறோம் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications