குறையும் பாதிப்பு.. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,183 பேருக்கு கொரோனா.. 3ம் அலை வருமா?
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,183 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களில் ஏற்பட்ட கொரோனா கேஸ்களில் இதுதான் மிகவும் குறைவான ஒருநாள் பாதிப்பு ஆகும்.
இந்தியாவில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து சரிந்து வருகிறது. தினசரி பாதிப்பு தற்போது 15 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது. இந்தியாவில் இதுவரை 3,39,84,479 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது 2,07,937 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக இருக்கிறார்கள். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 177 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை இந்தியாவில் 4,50,991 பேர் பலியாகி உள்ளனர்.

கேரளா
கேரளாவில் தினசரி கேஸ்கள் குறைந்த காரணத்தால் இந்தியாவிலும் தேசிய அளவில் பதிவான மொத்த கேஸ்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கேரளாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வந்த கொரோனா கேஸ்கள் சட்டென குறைந்துள்ளது. தினசரி கேஸ்கள் அங்கு 7 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது. கேரளாவில் 6,996 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 26,342 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 46,73,442 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 1,01,483 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக 65,79,608 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 1736 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 1,39,578 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 64,04,320 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 32,115 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

ஆந்திர பிரதேசம்
ஆந்திராவில் கொரோனா காரணமாக 20,57,562 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 310 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 14,256 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 20,36,048 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 7,258 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு 1350க்கும் கீழ் சென்றுள்ளது. தமிழ்நாட்டில் மூன்றாம் அலை பரவலுக்கான அறிகுறிகள் தெரியவில்லை. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக 26,79,568 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 13 பேர் பலியாகி உள்ளனர். புதிதாக 1303 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 35,796
பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 26,27,780 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 15,992 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

உத்தர பிரதேசம்
இந்தியாவில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் ஒன்றான உத்தர பிரதேசத்திலும் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் கொரோனா காரணமாக 17,09,965 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 11பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 142 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 22,895 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 16,86,928 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications