வெளியே போகும்போது முகக் கவசம் அணியுங்கள்.. வீட்டில் தயாரித்ததும் ஓகே: மத்திய அரசு
டெல்லி: கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை இந்தியா முழுக்க 3000த்தை தாண்டிய நிலையில், மத்திய அரசு சனிக்கிழமையன்று ஒரு முக்கிய ஆலோசனையை வெளியிட்டது,
Recommended Video
COVID-19 பரவுவதைத் தடுக்கும் பொருட்டு மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்போது கட்டாயம் முகக் கவசம் அணியுமாறு கேட்டுக் கொண்டுள்ளது அரசு.

'முகம் மற்றும் வாய் ஆகியவற்றை மூடும் வகையில் வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக் கவசத்தை பயன்படுத்தினால் கூட போதுமானது. இதுபோன்ற முகமூடிகளைப் பயன்படுத்துவது சமூகத்தைப் பெரிதும் பாதுகாக்க உதவும். சில நாடுகள் வீட்டில் தயாரிக்கப்பட்ட முகமூடிகளால் பலன் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளன. இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.
கொடிய கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு, அமெரிக்காவில், அதிபர் டொனால்ட் டிரம்ப் அனைத்து குடிமக்களுக்கும் தானாக முன்வந்து மருத்துவ அல்லாத முகமூடிகளை அணியவேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது கூடுதல் பொது சுகாதார நடவடிக்கையாக பரிந்துரைத்துள்ளார். மருத்துவ முகக் கவசங்கள், மருத்துவ பணியாளர்களுக்கு போதும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications