நிலைமை மோசமாகிறது.. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் இந்தியாவில் ஏற்பட்ட அதீத கொரோனா பாதிப்பு
டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,553 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது.இது தான் இந்தியாவில் ஓரு நாளில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய அதிகபட்ச பாதிப்பு ஆகும்.
Recommended Video
இதன் மூலம் நாட்டின் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,000த்தை தாண்டி உள்ளது .நாடு முழுவதும் 17,265 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 14,715 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 2546 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர் . நாட்டில் இதுவரை கொரோனாவால் 543 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத், ஒடிசா, மத்திய பிரதேசதம் மற்றும் ராஜஸ்தானில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இன்றைக்கு புதிதாக பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தூர் நிலவரம்
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் மேலும் மூன்று பேர் இறந்தனர், இதன் மூலம் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இந்தூரில் ஏழு பேர் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தூரில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 897 ஆக உயர்ந்துள்ளது

2 பேர் உயிரிழப்பு
பீகாரில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் மூன்று நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பீகார் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோய் பீகார் மாநிலத்தில் இரண்டு பேரை கொன்றுள்ளது. 42 நோயாளிகள் இதுவரை குணமடைந்துள்ளனர்.

108 பேருக்கு பாதிப்பு
குஜராத்தில் இன்று மட்டும் 108 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதால் கொரோனா வைரஸ் தொற்றால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,851 ஆக உயர்ந்தது. குஜராத்தில் மேலும் நான்கு நோயாளிகள் கொரோனா வைரஸால் இன்று உயிரிழந்துள்ளனர், இதனால் அந்த மாநிலத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.

ஒடிசா நிலவரம்
ஜம்மு-காஷ்மீரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 354 ஆக உயர்ந்துள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் மேலும் நான்கு நபர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவில் புதிதாக ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதிப்பு 68 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 43 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஜெய்ப்பூரில் அதிகம்
ராஜஸ்தானில் கொரோனா வைரஸால் மேலும் ஒருவர் இறந்தார், இன்றைய நிலவரப்படி 17 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக பரவி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வைரஸ் காரணமாக ராஜஸ்தானில் இதுவரை 24 பேர் இறந்துள்ளனர். அதில் ஜெய்ப்பூரில் மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 1,495 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்..

உள்துறை அமைச்சகம்
கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திராவில் எழுபத்தைந்து பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 722 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் மூன்று பேர் இறந்ததால் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆந்திராவில் 20 ஆக உயர்ந்துள்ளன. இந்தூர், மும்பை, புனே, ஜெய்ப்பூர், கொல்கத்தா மற்றும் மேற்கு வங்காளத்தின் சில இடங்களில் கொரோனா வைரஸ் தொற்றின் நிலைமை அதி தீவிரமாக உள்ளதாக உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
-
இந்தியாவின் நிலைமை மோசமாக போகுது! டிரம்ப் பார்த்த வேலையால் வந்த வினை! இப்படியா சிக்கல் வரனும்! -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்! -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு












Click it and Unblock the Notifications