கொரோனா தடுப்பு மருந்து கோவிஷீல்டு: இந்தியாவில் அடுத்த 2 கட்ட மனித பரிசோதனைக்கு டிசிஜிஐ அனுமதி
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்து இருக்கும் கொரோனா தடுப்பு மருந்து ஆய்வை இந்தியாவில் இரண்டாவது, மூன்றாம் கட்டமாக மனித பரிசோதனை மேற்கொள்ள சீரம் இன்ஸ்டிடியூட்க்கு இந்திய மருந்துகள் தர கட்டுப்பாட்ட
டெல்லி: கோவிஷீல்டு எனப்படும் கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் இரண்டாவது, மூன்றாம் கட்டமாக மனித பரிசோதனை மேற்கொள்ள சீரம் இன்ஸ்டிடியூட்க்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
Recommended Video
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பு மருந்தினை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பு மருந்தை ஊசி மூலம் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் மருத்துவ பரிசோதனை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
பிரிட்டனில் ஐந்து இடங்களில் மனிதர்களிடம் முதல் இரண்டு கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவை இரண்டுமே வெற்றி பெற்றுள்ளன. இந்த இரண்டு கட்டத்திலும் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பாதுகாப்பு கிடைத்துள்ளது.

கோவிஷீல்டு மருந்து பரிசோதனை
இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் பெற்றுள்ளது. இந்தியாவில் இந்த தடுப்பு மருந்துக்கு ‘கோவிஷீல்டு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் பரிசோதனை
இந்தியாவில் கோவிஷீல்டு மருந்தினை மொத்தம் 3 கட்டங்களாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய திட்டமிடப்படிருந்தது.
இதையடுத்து, மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் இந்த தடுப்பூசி முதல் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை நடைபெற்றது. இந்த பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

டிசிஜிஐ அமைப்புக்கு கடிதம்
ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்தினை 2 மற்றும் 3 ஆம் கட்டமாக மனிதர்களுக்கு பரிசோதனை செய்ய அனுமதி தரக்கோரி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் (DCGI) சீரம் இன்டிடியுட் நிறுவனம் கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்ய மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் (Central Drugs Standard Control Organisation )சிறப்பு நிபுணர் குழு ஒன்றை அமைத்தது.

சிடிஎஸ்ஒசி பரிந்துரை
அந்த குழு ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை மனிதர்களுக்கு அடுத்தகட்டமாக செலுத்துவது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த ஆய்வுகளுக்கு பின்னர் ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்தினை 2 மற்றும் 3 ஆம் கட்டங்களாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய அனுமதி வழங்கும்படி சிடிஎஸ்ஒசி (CDSOC) அமைப்பின் நிபுணர் குழு கடந்த 31 ஆம் தேதி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு பரிந்துரை வழங்கியது.

கோவிஷீல்டு பரிசோதனைக்கு அனுமதி
இந்நிலையில், சிடிஎஸ்ஒசியின் சிறப்புக்குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இந்திய சிரம் இன்ஸ்டிடியுட்டிற்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்தினை 2 மற்றும் 3 ஆம் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

மனித பரிசோதனையில் 1600 பேர்
இந்த அனுமதியின் மூலம் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு சோதனை முறையில் 2 மற்றும் 3 ஆம் கட்டமாக செலுத்தி பரிசோதனை செய்யப்பட உள்ளது. இந்த மனித பரிசோதனைக்கு இந்தியாவில் 18 வயதை கடந்தவர்கள் 1600 பேர் உட்படுத்தப்படுவார்கள்.

எங்கெங்கு பரிசோதனை
நாட்டின் 17 இடங்களில் டெல்லி எய்ம்ஸ், புனேவில் இருக்கும் பிஜே மருத்துவக் கல்லூரி, பாட்னாவில் இருக்கும் ராஜேந்திர நினைவு ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட், சண்டிகரில் இருக்கும் மருத்துவ முதுகலை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஜோத்பூர் எய்ம்ஸ், கோரக்பூரில் இருக்கும் நேரு மருத்துவமனை, விசாகப்பட்டினத்தில் இருக்கும் ஆந்திரா மருத்துவக் கல்லூரி, மைசூரில் இருக்கும் ஜெஎஸ்எஸ் அகாடமி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் மனித பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications