Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"காளிசரண் ஞாபகமிருக்கா".. குற்றம் செய்தாலும் கழுத்தில் "காவிதுண்டு" இருந்தால் பாஜக ஓடிவரும்: சிபிஎம்

காவிநிற துண்டு குறித்து பிருந்தா காரத் விமர்சனம் செய்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீங்கள் என்ன குற்றம் செய்தாலும்சரி, உங்க கழுத்தில் காவி துண்டு மட்டும் இருந்தால் போதும், உங்களை காப்பாற்ற பாஜக ஓடோடி வரும்" என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் குற்றம் சாட்டியுள்ளார்..

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த இந்து மத தலைவர் காளிசரண் மகாராஜ்.. இவர் வாயை திறந்தாலே சர்ச்சையாகிவிடும்.. உடனே அவருக்கு பாஜக சப்போர்ட்டுக்கு வந்துவிடும்.

இப்படித்தான், சட்டீஸ்கர் மாநிலம் ராயப்பூரில் ஒரு ஆன்மீக மாநாடு நடந்தது.. அந்த ஆன்மீக மாநாட்டில் காளிசரண் பங்கேற்று பேசியபோது, மகாத்மா காந்தி குறித்து தவறான வார்த்தையை பயன்படுத்தினார்...

 வழக்கு பதிவு

வழக்கு பதிவு

அதுமட்டுமல்ல, மகாத்மாவை சுட்டுக் கொன்ற கோட்சேவை வழக்கம்போல் பாராட்டி பேசினார்... அவரது அந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது... காங்கிரஸ் கட்சி கொந்தளித்தது.. இது தொடர்பாக காளிசரண் மீது ராய்ப்பூர் போலீசில் புகாரும் தரப்பட்டு, வழக்கும் பதிவு செய்யப்பட்டது.. ஆனால், அவ்வளவு பேசிய காளிசரணை காணவில்லை... அவரை போலீசாரும் தேட ஆரம்பித்தனர்.. இறுதியில், மத்தியபிரதேச மாநிலம் கஜுராஹோ பகுதியில் பதுங்கியிருந்தார்.. அங்கேயே அவரை கைது செய்தனர்..

 ஆட்சேபணை

ஆட்சேபணை

இந்த கைது சம்பவம் பாஜக மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. கைது நடவடிக்கைக்கு மத்தியபிரதேச மாநில அரசு உடனடியாக தன்னுடைய ஆட்சேபனை கருத்துக்களை அப்போதே பதிவு செய்திருந்தது.. இதில், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கைலாஷ் விஜயவர்கியா தெரிவித்த கருத்துக்கள் காங்கிரஸ் கட்சியினரை அதிர செய்தது.. கைலாஷ் விஜயவர்கியா சொன்னது இதுதான்:

தலைவர்கள்

தலைவர்கள்

"சாமியார்கள் உள்பட ஒவ்வொரு குடிமகனும் தகுந்த வார்த்தைககளை பயன்படுத்த வேண்டும்... மத தலைவர்களிடம் சற்று தாராள மனப்பான்மை இருக்க வேண்டும்.. நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளியான அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து உமர் காலித் உள்ளிட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தினர்... அப்போது இந்த என்னமோ பிரிவினையால் சூழப்பட்டு, துண்டு துண்டாக இருப்பது போன்ற தேசவிரோத முழக்கங்களை எழுப்பினார்கள்.. அதற்காக உமர் காலித் உள்ளிட்ட மாணவர்கள் கைதும் செய்யப்பட்டனர்...

 ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி

இதனையடுத்து, ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் இடதுசாரி தலைவர்கள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்து சென்று மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர்.. அவர்களின் முதுகில் தட்டி கொடுத்தார்கள்.. அப்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?" என்று விஜயவர்கியா கேள்வி எழுப்பியிருந்தார்... அதாவது காளிசரணுக்கு ஆதரவாக கைலாஷ் விஜயவர்கியா பேசியிருந்தார்..

 பிருந்தா காரத்

பிருந்தா காரத்

இந்த பேச்சுக்குதான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. செய்தியாளர்களிடம் இதை பற்றி பிருந்தா காரத் சொன்னபோது, "காந்திஜியின் கொலையாளிகளை பாஜக மற்றும் சங்பரிவார் போற்றி பாராட்டும் என்பது தெரிந்த விஷயம்தான்.. ஆனால், அவர்களை பாதுகாக்க பாஜக தலைவர்கள் கேடயத்தை பயன்படுத்துவதான் நாட்டின் உச்சக்கட்ட சோகம்..

 காவி துண்டு

காவி துண்டு

இந்த காவி அனைத்து அரசியலமைப்பு விரோத, தேச விரோத சக்திகளையும் பாதுகாக்க பயன்படுத்தப்படுகிறது... ஒன்றும் வேணாம், உங்க கழுத்தில் காவி துண்டு மட்டும் அணியுங்கள், அதுக்கப்பறம் நீங்கள் சட்டத்திலிருந்து தானாகவே விடுபட்டு விடுவீர்கள்.. நீங்க என்ன குற்றம் செய்தாலும் சரி, கழுத்தில் காவி துண்டு மட்டும் போட்டுக் கொள்ளுங்கள், உடனே உங்களை காப்பாற்ற பாஜக வந்துவிடும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+