ராஜினாமாவில் ராகுல் உறுதி- புதிய தலைவரை தேர்வு செய்ய கூடுகிறது காங். காரிய கமிட்டி!
Recommended Video
டெல்லி: லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவது என்ற முடிவில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார். இதனையடுத்து புதிய தலைவர் அல்லது வழிகாட்டுதல் குழு ஒன்றை உருவாக்குவது குறித்து ஆலோசிக்க ஓரிருநாட்களில் காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் நடைபெற உள்ளது./
லோக்சபா தேர்தலில் 52 இடங்களில்தான் வென்றது காங்கிரஸ். இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் காங்கிரஸ் பறிகொடுத்தது. அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியிலேயே தோல்வியும் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் தாம் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் அறிவித்தார். ஆனால் காரிய கமிட்டிக் கூட்டம் இதனை நிராகரித்தது.

ராகுல் உறுதி
இருப்பினும் தமது ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார். மூத்த தலைவர்களான ப.சிதம்பரம், அசோக் கெலாட் ஆகியோர் கட்சி தலைமையின் விருப்பத்தை மீறி வாரிசுகளை தேர்தலில் களத்தில் இறக்கியதிலும் ராகுல் காந்தி கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்.

சந்திக்க மறுத்த ராகுல்
இதனால் மூத்த தலைவர்களை சந்திக்க மறுத்துவிட்டாராம் ராகுல். மேலும் புதிய எம்.பி.க்களும் ராகுலை சந்திக்க முயற்சிக்கின்றனர். ஆனாலும் ராகுல் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லையாம்.

ராகுலுடன் ஆலோசனை
இதனிடையே மூத்த தலைவர்களான அகமது படேல் மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோர் நேற்று ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போதும் தமது பதவி விலகல் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என ராகுல் திட்டவட்டமாக கூறிவிட்டாராம்.

புதிய தலைமை
இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் அல்லது கூட்டுத் தலைமையை உருவாக்குவது குறித்து விவாதிக்க விரைவில் அக்கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் கூட உள்ளது என்கின்றன டெல்லி தகவல்கள்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications