6 சிறுமி பாலியல் வன்கொடுமை.. விடுதலையான தஷ்வந்த்.. உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு!
டெல்லி: 2017ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் தொல்லை வழக்கில் தஷ்வந்தை விடுதலை செய்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ளது.
2017ஆம் ஆண்டு சென்னையை அடுத்த போரூரில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தஷ்வந்த் என்ற இளைஞர், பின்னர் எரித்து கொலை செய்தார். இதன்பின் தஷ்வந்த் கைது செய்யப்பட்ட நிலையில், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய காவல்துறை தாமதம் செய்தது. இதனால் நீதிமன்றத்தில் தஷ்வந்த் ஜாமின் கோரினார். அதனை சென்னை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு ஜாமின் வழங்கியது.

அதன்பின் வீட்டில் இருந்த தாயை அடித்துக் கொன்ற தஷ்வந்த், வீட்டில் இருந்த நகைகளுடன் மும்பை பறந்தார். ஜாமினில் வெளி வந்த தஷ்வந்த், தாயை கொலை செய்துவிட்டு தப்பியதால், இந்த வழக்கு தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பல்வேறு கட்ட தேடுதல் வேட்டைக்கு பின், தஷ்வந்த் கைது செய்யப்பட்டார்.
சுமார் ஓராண்டாக விசாரணை நடைபெற்ற நிலையில், செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தஷ்வந்த்-க்கு மரண தண்டனை விதித்தது. அதேபோல் தாயை கொலை செய்த வழக்கில் தந்தை பிறழ் சாட்சியாக மாறியதால், தஷ்யந்த் விடுதலை செய்யப்பட்டார். அதேபோல் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மரண தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இதனால் மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கிலும் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி உச்சநீதிமன்றம் தஷ்வந்தை விடுதலை செய்து உத்தரவொட்டது. வீடியோக்கள், சிசிடிவி காட்சிகள், மரபணு பரிசோதனை ஒத்துப் போகவில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டது. இது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சிறுமியை பாலியல் தொல்லை வழக்கில் தஷ்வந்தை விடுதலை செய்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications