டெல்லி வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரிப்பு- 1820 பேர் கைது
டெல்லி: வடகிழக்கு டெல்லியில் சி.ஏ.ஏ. ஆதரவு போர்வையில் இந்துத்துவா கும்பல் நடத்திய வெறியாட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த வன்முறைகளில் ஈடுபட்டதாக 1820 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஷாகீன் பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெறுகிறது.

இதே பாணியில் வடகிழக்கு டெல்லியிலும் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தை இஸ்லாமியர்கள் முன்னெடுத்தனர். இதற்கு எதிராக பாஜக தலைவர்களின் தூண்டுதலின் பேரில் வன்முறை கும்பல் வெறியாட்டம் போட்டது.
இதனால் வடகிழக்கு டெல்லியே போர்க்களமானது. இஸ்லாமியர்கள் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் இலக்கு வைத்து சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. இஸ்லாமியர்களை குறிவைத்தும் இந்த கும்பல் தாக்குதல் நடத்தியது.
இந்த கோர வெறியாட்டத்துக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 53 ஆக அதிகரித்துள்ளது. டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 44 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் 5 பேரும் எல்.என்.ஜே.பி. மருத்துவமனையில் 3 பேரும் ஜேபிசி மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் படுகாயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மோதல்களில் உளவுப்பிரிவு அதிகாரி அங்கித் சர்மா படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தேடப்பட்டு வந்த ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலர் தாஹிர் உசைன் இன்று டெல்லி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
டெல்லி வன்முறைகள் தொடர்பாக பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் மறுத்துவிட்டனர். இது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
1820 பேர் கைது
டெல்லி வன்முறைகள் தொடர்பாக இதுவரை 654 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 1820 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர் என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications