டெல்லி வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரிப்பு- 1820 பேர் கைது
டெல்லி: வடகிழக்கு டெல்லியில் சி.ஏ.ஏ. ஆதரவு போர்வையில் இந்துத்துவா கும்பல் நடத்திய வெறியாட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த வன்முறைகளில் ஈடுபட்டதாக 1820 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஷாகீன் பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெறுகிறது.

இதே பாணியில் வடகிழக்கு டெல்லியிலும் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தை இஸ்லாமியர்கள் முன்னெடுத்தனர். இதற்கு எதிராக பாஜக தலைவர்களின் தூண்டுதலின் பேரில் வன்முறை கும்பல் வெறியாட்டம் போட்டது.
இதனால் வடகிழக்கு டெல்லியே போர்க்களமானது. இஸ்லாமியர்கள் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் இலக்கு வைத்து சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. இஸ்லாமியர்களை குறிவைத்தும் இந்த கும்பல் தாக்குதல் நடத்தியது.
இந்த கோர வெறியாட்டத்துக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 53 ஆக அதிகரித்துள்ளது. டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 44 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் 5 பேரும் எல்.என்.ஜே.பி. மருத்துவமனையில் 3 பேரும் ஜேபிசி மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் படுகாயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மோதல்களில் உளவுப்பிரிவு அதிகாரி அங்கித் சர்மா படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தேடப்பட்டு வந்த ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலர் தாஹிர் உசைன் இன்று டெல்லி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
டெல்லி வன்முறைகள் தொடர்பாக பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் மறுத்துவிட்டனர். இது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
1820 பேர் கைது
டெல்லி வன்முறைகள் தொடர்பாக இதுவரை 654 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 1820 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர் என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications