வங்கியில் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை.. எந்த வங்கி ஏடிஎம்மிலும் கட்டணமின்றி பணம் எடுக்கலாம்: நிர்மலா
டெல்லி: கோவிட் -19ன் பொருளாதார தாக்கத்தை சமாளிப்பதற்கான அறிவிப்புகளை, இன்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். வருமான வரி தாக்கலுக்கான கால நீட்டிப்பு உள்ளிட்டவை இதில் அடங்கும். இதில் வங்கித்துறை சார்ந்து அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதை பாருங்கள்:
Recommended Video
உங்கள் டெபிட் கார்டிலிருந்து எந்த வங்கி ஏடிஎம்களிலும் பணம் எடுக்கலாம், அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அடுத்த 3 மாதங்களுக்கு இந்த சலுகை நீடிக்கும். வங்கியில் மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதற்கும் அபராதம் விதிக்கப்பட மாட்டாது. டிஜிட்டல் வழியில் வணிகம் செய்வோருக்கான வரி குறைக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக, 2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய 2020 ஜூன் 30 வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது. தாமதமாக செலுத்தப்படும் வருமான வரிக்கான வட்டி 12 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ஆதார்-பான் இணைப்புக்கான கெடு மார்ச் 31 வரையில் இருந்தது, அது ஜூன் 30ம் தேதிக்கு நீட்டிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.